Tuesday, January 30, 2024

ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் 🪷 கோயில் கோபுர தரிசனம் கோடி புண்ணியம்

 🙏🙏 கோபுர தரிசனம் கோடி புண்ணியம்🙏🙏




🪷🪷🪷 ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில் 🪷🪷🪷

🪷 மூலவர் :
 🙏சுத்த
ரத்தினேஸ்வரர்

🪷 உற்சவர் :
 🙏சோமாஸ்கந்தர்

🪷 தாயார் :
 🙏அகிலாண்டேஸ்வரி

🪷 தீர்த்தம் :
 🙏பிரம்ம தீர்த்தம்

🪷 ஊர் :
 🙏ஊட்டத்தூர்

🪷 மாவட்டம் :
 🙏திருச்சிராப்பள்ளி

 தேவார வைப்புத் தலப்பாடல் பாடியவர்கள் :

 🙏அப்பர்

 தலவரலாறு

🪷ஊட்டத்தூரின் மேற்கே உள்ள சோளேஸ்வரம் எனும் கோயிலை அமைத்த ராஜராஜ சோழன் அடிக்கடி அப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்த சமயம் ஒருமுறை மன்னர் வருகைக்காகப் பாதையைச் சரிசெய்யும் பணியில் மண்வெட்டியால் புல் செதுக்கும் பொழுது ஓரிடத்தில் இரத்தம் வரவே, இச்செய்தி மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது.

🪷 மன்னர் வந்து சோதித்து சிவலிங்கத்தைக் கண்டு, மன்னிக்க வேண்டி அவருக்கு திருக்கோயில் எழுப்பினார். மூலவர் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டி வடு உள்ளது

 நந்தி ஆறு

🪷புண்ணியநதிகள் தம்முள் எவர் பெரியவர் என்ற போட்டியில் சிவபெருமானிடம் தீர்ப்புக்கு வர, நந்தியை அழைத்து அனைத்து நதிகளையும் குடித்துவிடும் படியும் எந்த நதியைக் குடிக்கமுடியவில்லையோ அதுவே சிறந்தது எனக்கூற, நந்தியெம்பெருமானால் கங்கையைக் குடிக்க முடியாததால் அதுவே சிறந்தது எனத் தீர்ப்பாயிற்று. தாம் குடித்த நதிகளை எல்லாம் வெளியே நந்தியெம்பெருமான் வெளியே விட, அதுவே நந்தி ஆறு என ஆயிற்று


 பிராத்தனை

 நோய்தீர்க்கும் தீர்த்தம்


🪷பஞ்ச
நதனக்கல்லுக்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலையிட்டுப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் போட்டு அந்த தீர்த்தத்தைப் பருக சிறுநீரகக்கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை

 முகவரி

🪷அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்,
லால்குடி தாலுகா,
பாடலூர் வழி,
ஊட்டத்தூர்,
திருச்சி 621109.

தொலைபேசி:
+91 83449 11836.

     🕉 சிவாய நம;

Friday, January 26, 2024

நால்வர்கள் சென்ற நால்வழிப்பாதை.

 சிவாயநம திருச்சிற்றம்பலம்.

நால்வர்கள் சென்ற நால்வழிப்பாதை.

நம் சைவசமயம் தமிழ்மொழி தமிழ்மறை பன்னிரு திருமுறை  என்றாலே முக்கிய இடத்தில் முன் நிற்பவர்கள் நம் போற்றுதலுக்குரிய நால்வர் பெருமக்கள் ஆவர்.இவர்கள் நால்வர்களும் நான்கு வழியான பாதையில் பயணித்து தாங்கள் விரும்பியதை அடைந்தவர்கள்.

இதில் ஒவ்வொருவர் சிந்தனையும் தேடலும் வெவ்வேறு விதமாக அமைந்துள்ளது. இதை நாம் சற்று ஆராய்ந்து பார்த்தால் எந்த பாதை எளிமையானது.எந்த பாதை சரியானது என்பதை அறிந்து நமக்கு பிடித்த எந்த பாதையை வேண்டுமானாலும் தேர்ந்தெடுத்து பயணிக்கலாம்.தவறு ஒன்றுமில்லை. ஆனால் எந்த பாதையையுமே சரியாக அறியாமல் எல்லா பாதைகளிலும் கலந்து பயணித்தால் நாம் சேரவேண்டிய இடத்தை அடைய பல பிறவிகள் எடுக்கவேண்டிய வரும்.அப்போதும் இலக்கை அடைய முடியுமா என்பது சந்தேகம்தான்.

நால்வரில் முதல்வர் திருஞானசம்பந்த பெருமான்.இவர் மூன்றரை வயதிலேயே உமையவள் திருக்கரங்களால் காமதேனுவின் பாலிலே தமிழ் எனும் ஞானத்தேன் கலந்த ஞானப்பால் கலந்து சுவைத்து தமிழ் ஞானம் பெற்று அன்னைத்தமிழில் இறைவனுக்கு தமிழ்மாலை சூட்ட ஆரம்பித்தார்.இறைவன் உமையவள் தமிழன்னை மூவரின் அருள்பெற்று பின்னர் இறைவழியில் பயணிக்க ஆரம்பித்தவர்.

திருஞான சம்பந்தர் சூட்டிய தமிழ்மாலையை திருநீலகண்ட யாழ்ப்பாணர் தம் யாழிசையால் பண்ணிசைக்க ஐயனின் இல்லத்தரசி மதங்கசூளாமணி அம்மை தம் தேன்குரலால் பண்ணிசை பாமாலையாக சூட்டி அழகு பார்த்தனர்.இந்த மூவர் கூட்டணி மூன்று திருமுறைகளை சைவர்களுக்கு பண்ணிசைப்பாமாலையாக வழங்கியது. மதங்கசூளாமணி அன்னை மழலையாக இருந்த திருஞானசம்பந்த பெருமானை தன் மார்பிலும் தோளிலும் ஆலயம் ஆலயமாக தூக்கிச்சுமந்தார். சம்பந்தபெருமான்  சற்று பெரியவராக ஆனபோதும் சுமக்க முடியாமல் தூக்கி சுமப்பதை கண்ட இறைவன் தம் பூதகணங்களுக்கு அறிவுறுத்தி முத்து பல்லக்கை தந்து திருஞானசம்பந்த பெருமானை அடியார் பெருமக்கள் சுமக்க அதில் பயணிக்கும்படி செய்தார்.இந்த விடயம் யாவரும் வெளியில் சொல்லாதது அடியேனுக்கு சற்று வருத்தம்.

சம்பந்தபெருமான் தமிழ்மாலை தமிழ்மாலை என முன்னிருத்தினாலும் அதில் வைதீக வாடையும் வானுலக சொர்கமுமே முன்னிலை வகிக்கிறது. உதாரணத்திற்கு ஏராளமான ஆதாரம் இருப்பினும் ஒன்றிரண்டை சான்றுகளாக முன்வைக்கிறேன்.

முதல் சான்று நமச்சிவாய பதிகத்தில் தமிழ்மறையை முன் வைக்கவேண்டிய இடத்தில் வேதம் நான்கிலும் மெய்ப்பொருள் ஆவது நாதன் நாமம் நமச்சிவாயவே என்றார்.இங்கே தமிழ்மறைக்கு எதிரான இன்று கருவறையில் இருந்து தமிழையே வெளியேற்றிய குடமுழுக்கில் இருந்தும் தமிழை வெளியேற்றிய அந்த வேதத்திற்கு ஒப்புதல் வழங்கி உயர்திகாட்டியுள்ளார்.
பதிகத்திற்கு பதிகம் தமிழை வளர்க்கின்றேன் என பதிவும் செய்துள்ளார்.

அடுத்து கோளறு திருப்பதிகத்தின் நிறைவு பாடலில் வானில் அரசாள்வர் ஆணை நமதே என நிறைவு செய்திருப்பார்.இது மண்ணில் உள்ள திருக்கயிலை சிவபுரத்தை ஐயன் அறியவில்லையோ என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது.

காரணம் பெருமான் இறைமுத்தி அடையும் அந்த நிகழ்வே அதற்கு சான்றாக அமைந்துள்ளது. இறைமுத்தியின் போது வானில் இருந்து வந்த அக்னி படிக்கட்டுகளில் ஏறி விண்ணுலகம் சென்றதாக நமக்கு அந்த நிகழ்வு காட்டுகிறது. பெருமான் சிவபுரத்தில் ஈசன் திருவடிக்கீழ் இருப்பாரா அல்லது விண்ணோர்கள் ஏத்த சொர்கலோகத்தில் வீற்றிருப்பாரா முடிவை அடியார்கள் விருப்பத்திற்கே விட்டு விடுகின்றேன். இறைவன் திருவடியை பெருமானின் உயிர் சேர்ந்து பிறவாமையை அடைய வேண்டுதலை முன்வைக்கிறேன்.  இந்த பாதை திருஞானசம்பந்த பெருமான் சென்ற பாதை.  நாளை திருநாவுக்கரசு பெருமான் சென்ற பாதையை சிந்திப்போம்

Sunday, January 14, 2024

திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில்🪷🪷கோபுர தரிசனம் கோடி🪷🪷புண்ணியம் தினம் ஒரு திருக்கோயில்🪷🪷

 🛕தினம் ஒரு திருக்கோயில்:-🔔

*🛕கோபுர தரிசனம் கோடி புண்ணியம்:*🪔

            🙏🙏🙏🙏🙏


🪷🪷🪷 திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில்


🪷 மூலவர் :
 🙏அரங்குள நாதர்
(ஹரதீர்த்தேசுவரர்)

🪷 தாயார் :
 🙏பெரியநாயகி அம்பாள்
(பிரகதாம்பாள்)

🪷 தல விருட்சம்
 🙏 பொற்பனை

🪷 மாவட்டம் :
 🙏புதுக்கோட்டை

🪷 ஊர்:
 🙏திருவரங்குளம்

 தல வரலாறு;

🪷 2000ம் வருடங்களுக்கு முன் கரிகால சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில். இக்கோவிலில் ஒரு குளம்  உள்ளது அக்குளத்து மட்டத்துக்கு லிங்கம் காணப்படவதால் அரங்குலநாதர்/ஹரதேஸ்வரர் என்று பெயர் பெற்றது.

🪷 அந்த  சுவாமியின் பெயர் மருவி திருவரங்குளம் என்று ஊரின் காரண பெயராக அமைந்தது.  அம்பாளுக்கு இது பூர நட்சத்திர கோவில்.   இந்த கோவில் ராஜாக்கள் வேட்டையாடி வந்த போது பனை மரம் இருந்தது.

🪷இந்த பழங்கள் தங்க பழமாக காட்சி அளித்தது.  அந்த  பழத்தின் பெயர் பொற்பனை.  அங்கு இருக்கும் விநாயகர் பெயர் பொற்பனை விநாயகர் என்று பெயர்.  இங்கு இருந்து 3 மைல் தொலைவில் முனிஸ்வரர் கோவில் உள்ளது.

🪷இந்த முனீஸ்வரர் பெயர் பொற்பனை முனீஸ்வரர்.  இந்த முனீஸ்வரர்  புதுகோட்டை மாவட்டம் காவல் தெய்வம்.  மூலாதார சக்தி உடைய அம்மனாக கருதப்படுகிறது.

🪷 வடநாட்டு செட்டியார் என்ற  பிரிவினர்கள் இக்கோவிலுள்ள தானியத்தை கண்டுபிடித்து ராஜாக்களிடம் ஒப்படைத்தனர்.  அம்பாளே செட்டியாரின் குழந்தையாய்  பிறந்து அவர்களின் குழந்தை பாக்கியத்தை தீர்த்தாள் மறுபடியும் இறைவனிடம் சேர்ந்தார்.


 பிரார்த்தனை:

🪷 குழந்தை இல்லாதவர்கள், கல்யாணமாகதவர்கள், அம்பாளை வழிபட்டு பலன்  அடையாலம்.  பூர நட்சத்திரம் உடையவர்கள் கல்யானமகதவர்களாக இருந்தால் அவர்கள் இக்கோவிலை வழிபட்டால் உடனே பலன்  அடையாலம்.  ஏனென்றால் அம்பாளுக்கும் பூர நட்சத்திரம் இருந்து கல்யாணம் நடைபெற்றதால் இங்கு பூர நட்சத்திரம்  உடையவர்கள் பலன் அடையாலம்.

 முகவரி:

🪷அருள்மிகு அரங்குலநாதர் திருக்கோவில்,

திருவரங்குளம், புதுக்கோட்டை-
622 505,

     🕉 சிவாய நம:

தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், மன்னிப்பு வேண்டி பெருமாளிடம் அடிபணிந்து நின்ற கோயில்........ பற்றி - விளக்கும் எளிய கதை

 ஓம் நமோ நாராயணாய 🙏



 

 

 

🌹🌺"  தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன்,  மன்னிப்பு வேண்டி  பெருமாளிடம் அடிபணிந்து நின்ற கோயில்........ பற்றி  - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹கேரளாவின் பிரசித்தி பெற்ற பாரதப்புழா நதிக்கரையில் இந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்திரமாக விளங்கியிருக்கிறது.

🌺"ஸ்ரீஸுஸீக்தி' இங்கு அருளப்பட்டதால் பல வகையான நூல்கள் இங்கு ஆராயப்பட்டன. இதனால் கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் சிறப்புற்றிருந்தது.

🌺ஸ்ரீ ராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்க நேரிட்டது. அப்போது அயோத்திக்கே ராமனை மீண்டும் அழைத்து செல்ல பரதன் அங்கு வந்தான்.

🌺இதைக்கண்ட லட்சுமணன், ராமனுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவனை கொல்ல முயற்சிக்கிறான் .

🌺இது தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்து பெருமாளிடம் அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதாகவும், இதனால் இத்தலம் "திருமொழிக்களம்' ஆனதாகவும் கூறுவர்.

🌺அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகள்  பழமையானது  
  புராண பெயர் : திருமூழிக்களம்
  மாவட்டம் : எர்ணாகுளம்
  மாநிலம் : கேரளா

🌺பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 62 வது திவ்ய தேசம்.லட்சுமணனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு கோபுரம், மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளான்.  
     
🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க 🌷🌹
-------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *

Friday, January 12, 2024

🛕தெய்வங்கள் பேசும் சப்தம் கேட்கும் விசித்திர ஆலயம்🛕 #திருபுரசுந்தரிஆலயம்

 🛕தெய்வங்கள் பேசும் சப்தம் கேட்கும் விசித்திர ஆலயம்🛕
                     
🪄பிஹாரில் இருக்கும் பஸ்தார் என்னும் இடத்தில் அமைந்துள்ளது ராஜராஜேஸ்வரி #திருபுரசுந்தரி ஆலயம்.

🪄இங்கு ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர்.நம் நாட்டில் புராதன கோவில்கள் ஏராளமாக இருந்தாலும்,ஒரு சில கோவில்கள் மிகவும் விசித்திரமான விஷயங்களை உள்ளடக்கியுள்ளது.



🪄ராஜராஜேஸ்வரி திரிபுரசுந்தரி கோவிலில் இரவில் தெய்வங்கள் ஒன்று கூடி பேசிக் கொள்வது போல் சப்தம் கேட்பது அவ்வூர் மக்களுக்கு மர்மமான விஷயமாக இருந்து வருகிறது.

🪄ஏறத்தாழ நானூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயம் ‘தாந்திரிக் பவானி மிஸ்ரா’என்பவரால் நிறுவப்பட்டது.அவர் அக்காலத்திலேயே தாந்திரீகம் மற்றும் வேத முறைப்படி எழுப்பிய இக்கோவில் மிகவும் மதிப்பிற்குரியதாக கருதப்படுவதால் இங்கு நிறைய தாந்திரீகர்கள் மற்றும் வேத சாஸ்திரம் பயின்றவர்கள் வருகை தருகின்றனர்.

🪄இங்கு திரிபுரா,
துமாவதி,
பகுளாமுகி,
தாரா,
காளி,
சின்ன மஸ்தா,
ஷோடசி,
மாதங்கி,
கமலா,
உக்ரதாரா,
புவனேஸ்வரி 

ஆகிய தேவியர்களுக்கு சன்னிதிகள் அமைக்கப்பட்டுள்ளன.

🪄இங்கு மூலஸ்தானத்தில் துர்காதேவி வீற்றிருக்கிறாள்.இந்திய மக்களால் அதிக அளவில் வணங்கப்படும் தெய்வமாக #துர்காதேவி இருப்பது குறிப்பிடத்தக்கது.

🪄இந்தியா மட்டுமல்லாமல் நம் தமிழ்நாட்டிலும் தீயவைகளை அழிக்கும் துர்கா தேவிக்கு தனி சிறப்புகள் உண்டு.

🪄இக்கோவிலில் இரவு வேளை பூஜை முடிந்ததும் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசிக் கொள்வது போன்ற சப்தம் மதில் சுவர் வாயிலாக கேட்கப்படுகிறது.இது மிகவும் ஆச்சரியப்படும் வகையில் உள்ளதால் இக்கோவில் மக்களிடையே பிரபலமானது.

🪄இதனை ஆராய்ச்சி செய்வதற்கு வந்த விஞ்ஞானிகள் குழு ஒரு நாள் இரவு முழுவதும் அங்கு தங்கி இருந்தனர்.வழக்கமாக இரவு நேரத்தில் இங்கே பக்தர்கள் கோவிலுக்குள் அனுமதிக்கப்படுவதில்லை.இரவில் கோவிலின் மதில் சுவரில் எதிரொலித்த வண்ணம் தெய்வங்கள் ஒருவருக்கொருவர் பேசுவதை போல் சப்தங்கள் கேட்பது உறுதி செய்யப்பட்டது.

🪄இந்த சப்தம் மனிதர்கள் பேசுவதை போலவே எதிரொலித்தது. ஆனால் நிச்சயமாக அது இந்த கோவிலின் வெளியில் இருந்து வரவில்லை என்பதை விஞ்ஞானிகள் உறுதி செய்தனர்.

🪄இந்நிலையில் எதனால் இந்த சப்தம் எழுகிறது?என்று தெரியாமல் குழப்பத்தில் ஆழ்ந்தனர்,ஆராய்ச்சி செய்ய வந்த விஞ்ஞானிகள் குழு.


🙏🛕🙏ௐ சக்தி பராசக்தி🙏🛕🙏

🙏🪄🙏#சர்வம் #சக்திமயம்.✍🏼🌹


Monday, January 8, 2024

ஸ்ரீ_பைரவர்_அருட்கடாட்சம் #பெற_தேய்பிறை_அஷ்டமி #விரத_வழிபாடும்

 ஸ்ரீ_பைரவர்_அருட்கடாட்சம் #பெற_தேய்பிறை_அஷ்டமி #விரத_வழிபாடும்
☘☘☘☘☘☘☘☘
 

 

 

 

தேய்பிறை அஷ்டமியில் பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் காலத்தினால் தீர்க்கமுடியாத தொல்லைகள் நீங்கும், நல்லருள் கிட்டும். பஞ்சதீபம் என்பது இலுப்பைஎண்ணை, விளக்குஎண்ணை, தேங்காய்எண்ணணை, நல்லெண்ணை, பசுநெய் ஆகும். இவற்றை தனித்தனி தீபமாக ஏற்ற வேண்டும். அகல் விளக்கில் ஏற்றலாம்.

ஸ்ரீ பைரவருக்கு இந்த பஞ்சதீபம் ஏற்றி வழிபட்டால் எண்ணிய செயல்கள் நிறைவேறும் என்பது ஐதீகம். தை மாதம் முதல் செவ்வாய்க்கிழமை தொடங்கி ஒவ்வொரு செவ்வாய் தோறும் பைரவரை வணங்கி கால பைரவ அஷ்டகம் படித்து வந்தால் எதிரிகள் அழிந்து, கடன்கள் தீர்ந்து, யம பயம் மட்டுமில்லாது எவர் பயமுமின்றி நீண்டநாள் வாழலாம்.

வாழ்க்கையில் தரித்திரம் வராமல் காத்து செல்வச் செழிப்பை வழங்குபவர். ஸ்வர்ணாகர்ஷண பைரவரை வடக்கு திசை நோக்கி அமர்ந்து வழிபடுவது சிறப்பு. திருவாதிரை நட்சத்திரத்தில் வழிபடுவதால் சிவனது அருள், செல்வம் கிட்டும். தாமரை மலர் மாலை, வில்வ இலை மாலை போட்டு வணங்குவது சிறப்பு.

தேய்பிறை அஷ்டமி திதிகளில் சிகப்பு நிற ஆடை அணிந்து, நெய் விளக்கு ஏற்றி, வடைமாலை சாற்றி, சிகப்பு நிற மலர்களைக் கொண்டு அர்ச்சித்து, வெள்ளைப் பூசனியில் நெய் தீபம் ஏற்றிவர நல்ல பலன் கிடைக்கும்.
☘☘☘☘☘☘☘☘
 

வியாழகிழமை ராகு கால நேரம் 1.30 to 3 மணி வரைக்கும்.

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...