🙏🙏 கோபுர தரிசனம் கோடி புண்ணியம்🙏🙏
🪷🪷🪷 ஊட்டத்தூர் சுத்தரத்தினேஸ்வரர் கோயில் 🪷🪷🪷
🪷 மூலவர் :
🙏சுத்த
ரத்தினேஸ்வரர்
🪷 உற்சவர் :
🙏சோமாஸ்கந்தர்
🪷 தாயார் :
🙏அகிலாண்டேஸ்வரி
🪷 தீர்த்தம் :
🙏பிரம்ம தீர்த்தம்
🪷 ஊர் :
🙏ஊட்டத்தூர்
🪷 மாவட்டம் :
🙏திருச்சிராப்பள்ளி
தேவார வைப்புத் தலப்பாடல் பாடியவர்கள் :
🙏அப்பர்
தலவரலாறு
🪷ஊட்டத்தூரின் மேற்கே உள்ள சோளேஸ்வரம் எனும் கோயிலை அமைத்த ராஜராஜ சோழன் அடிக்கடி அப்பகுதிக்கு வருவது வழக்கமாக இருந்த சமயம் ஒருமுறை மன்னர் வருகைக்காகப் பாதையைச் சரிசெய்யும் பணியில் மண்வெட்டியால் புல் செதுக்கும் பொழுது ஓரிடத்தில் இரத்தம் வரவே, இச்செய்தி மன்னரிடம் தெரிவிக்கப்பட்டது.
🪷 மன்னர் வந்து சோதித்து சிவலிங்கத்தைக் கண்டு, மன்னிக்க வேண்டி அவருக்கு திருக்கோயில் எழுப்பினார். மூலவர் சிவலிங்கத்தின் தலைப்பகுதியில் மண்வெட்டி வடு உள்ளது
நந்தி ஆறு
🪷புண்ணியநதிகள் தம்முள் எவர் பெரியவர் என்ற போட்டியில் சிவபெருமானிடம் தீர்ப்புக்கு வர, நந்தியை அழைத்து அனைத்து நதிகளையும் குடித்துவிடும் படியும் எந்த நதியைக் குடிக்கமுடியவில்லையோ அதுவே சிறந்தது எனக்கூற, நந்தியெம்பெருமானால் கங்கையைக் குடிக்க முடியாததால் அதுவே சிறந்தது எனத் தீர்ப்பாயிற்று. தாம் குடித்த நதிகளை எல்லாம் வெளியே நந்தியெம்பெருமான் வெளியே விட, அதுவே நந்தி ஆறு என ஆயிற்று
பிராத்தனை
நோய்தீர்க்கும் தீர்த்தம்
🪷பஞ்ச
நதனக்கல்லுக்கு மருத்துவச் சிறப்புகள் உள்ளதாக ஆய்வுகள் கூறுகின்றன. பஞ்சநதனக்கல் நடராஜருக்கு வெட்டிவேர் மாலையிட்டுப் பின்னர் அம்மாலையைப் பிரம்ம தீர்த்தத்தில் போட்டு அந்த தீர்த்தத்தைப் பருக சிறுநீரகக்கோளாறுகள் நீங்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை
முகவரி
🪷அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத சுத்தரத்தினேஸ்வரர் திருக்கோயில்,
லால்குடி தாலுகா,
பாடலூர் வழி,
ஊட்டத்தூர்,
திருச்சி 621109.
தொலைபேசி:
+91 83449 11836.
🕉 சிவாய நம;
No comments:
Post a Comment