Showing posts with label 108 திவ்ய தேசங்கள். Show all posts
Showing posts with label 108 திவ்ய தேசங்கள். Show all posts

Sunday, January 14, 2024

தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், மன்னிப்பு வேண்டி பெருமாளிடம் அடிபணிந்து நின்ற கோயில்........ பற்றி - விளக்கும் எளிய கதை

 ஓம் நமோ நாராயணாய 🙏



 

 

 

🌹🌺"  தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன்,  மன்னிப்பு வேண்டி  பெருமாளிடம் அடிபணிந்து நின்ற கோயில்........ பற்றி  - விளக்கும் எளிய கதை* 🌹🌺
--------------------------------------------------------

🌺🌹கேரளாவின் பிரசித்தி பெற்ற பாரதப்புழா நதிக்கரையில் இந்த பெருமாள் கோயில் அமைந்துள்ளது. இத்தலம் ஒரு காலத்தில் பெரிய கலாக்ஷேத்திரமாக விளங்கியிருக்கிறது.

🌺"ஸ்ரீஸுஸீக்தி' இங்கு அருளப்பட்டதால் பல வகையான நூல்கள் இங்கு ஆராயப்பட்டன. இதனால் கற்றறிந்த பெரியோர்கள் குழுமியிருந்த கல்வி மாநகரமாகவும், கலை நகரமாகவும் இத்தலம் சிறப்புற்றிருந்தது.

🌺ஸ்ரீ ராமன் வனவாசம் செல்லும்போது சித்திர கூடத்தில் தங்க நேரிட்டது. அப்போது அயோத்திக்கே ராமனை மீண்டும் அழைத்து செல்ல பரதன் அங்கு வந்தான்.

🌺இதைக்கண்ட லட்சுமணன், ராமனுடன் போர் செய்யவே பரதன் வருவதாக நினைத்து, அவனை கொல்ல முயற்சிக்கிறான் .

🌺இது தவறு என்பதை உணர்ந்த லட்சுமணன், தவறுக்கு மன்னிப்பு வேண்டி இத்தலத்து பெருமாளிடம் அடிபணிந்து நின்றதாகவும், அப்போது பரதனே வந்து லட்சுமணனை ஆரத்தழுவி இன்சொல் கூறியதாகவும், இதனால் இத்தலம் "திருமொழிக்களம்' ஆனதாகவும் கூறுவர்.

🌺அருள்மிகு லெட்சுமணப்பெருமாள் திருக்கோயில் சுமார் 2000 ஆண்டுகள்  பழமையானது  
  புராண பெயர் : திருமூழிக்களம்
  மாவட்டம் : எர்ணாகுளம்
  மாநிலம் : கேரளா

🌺பெருமாளின் மங்களாசாசனம் பெற்ற 108 திவ்ய தேசங்களில் இது 62 வது திவ்ய தேசம்.லட்சுமணனும் பரதனும் சேர்ந்து வழிபட்ட தலமாகும். இத்தலத்திற்கு கோபுரம், மண்டபம் போன்றவற்றை லட்சுமணன் கட்டி பல திருப்பணிகள் செய்துள்ளான்.  
     
🌺🌹 வையகம் வாழ்க 🌹 வையகம் வாழ்க 🌹 வளத்துடன் வாழ்க 🌷🌹
-------------------------------------------------
🌻🌺🌹 *சர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம் *

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...