Showing posts with label Siva Temples. Show all posts
Showing posts with label Siva Temples. Show all posts

Wednesday, January 8, 2025

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை
சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு….

ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத்து வரச் சொல்லி நாரதர் ராவணனுக்கு அறிவுறுத்தினார். ராவணனுக்கு கர்வம் அதிகம் என்பதால் ஒட்டுமொத்த கைலாய மலையை வேரோடு எடுத்து வர எண்ணி, மலையைத் தூக்கினான். மலையைத் தூக்க விடாமல் தடுக்க, சிவபெருமான் தனது காலில் பெருவிரலால் நிலத்தை அழுத்தினார்.

இதனால் பாரம் தாங்க முடியாத ராவணன் பாதாளத்திற்கு சென்றான். சிவபெருமானின் பெருவிரல் சுமையால் நசுக்கப்பட்ட ராவணன் வலியால் துடித்து ஒரு துதி பாடினான். அந்தத் துதியால் மூவுலகும் நடுங்கியது. பின்னர், இந்த துதி பாடியதால் சிவபெருமான் ராவணன் என்ற பெயரை வழங்கினார். இந்த பெயர் சிவபெருமானால் கொடுக்கப்பட்டது என்பதால் ராவணனுக்கு அவனுடைய இந்தப் பெயர் மிகவும் இஷ்டம்.

தன்னுடைய முழு பலத்தையும் பிரயோகித்த பின்னரும், ராவணனால் அந்த மலையைத் தூக்க முடியவில்லை. அதன்பின்னர், தொடர்ந்து 14 நாட்கள் சிவ மந்திரத்தை ஜெபித்து வந்தான். ஒரு பிரதோஷ தினத்தன்று மாலை வேளையில் சிவபெருமானை மகிழ்விக்க ராவணன் இந்த சிவ தாண்டவ ஸ்தோத்திரத்தைப் பாடினான். சரியான தாளத்தில் மிகுந்த பக்தியுடன் பிரதோஷ காலத்தில் இந்த பாடலைப் பாடினான் ராவணன்.

ராவணனின் பக்தியைக் கண்டு, இந்த சக்தி மிகுந்த மந்திரத்தைக் கேட்டு, சிவபெருமான் புன்முறுவல் புரிந்தார். பார்வதி தேவி ராவணன் மீது பரிதாபம் கொண்டு, அவனை விடுவிக்கச் சொல்லி சிவபெருமானிடம் கூறினார். அதனால் சிவபெருமான் ராவணனை விடுவித்து, அவனுக்கு பல வரங்கள் கொடுத்து சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பாடிய ராவணனுக்கு ஆசிகள் வழங்கினார்.

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் பொருள்
அடர்ந்த காடு போன்ற திருச்சடையிலிருந்து பொங்கும் நீரால் நனைக்கப்படும் அவன் திருக்கழுத்தில், இராசநாகம் மாலை போல் சுழன்றாட, “டம டம” என ஒலியெழுப்பும் உடுக்கையேந்தி திருக்கூத்தாடும் சிவன், அவன் அருள் மழையை எங்கும் பொழிக…

சுருள்சடையாலான குளத்தில் அலைவீசி ஆடும் கங்கையும், திருநெற்றியில் கனல் வீசும் தீயையும், இளம்பிறையை அணிகல்னாகவும் கொண்டுள்ள சிவனை நான் போற்றுகின்றேன்

பரந்த ஞாலத்தின் உயிர்களெல்லாம் வாழத் திருவுளம் கொண்டவனும், மலையரசன் மகளுடன் மகிழ்ந்தாடுபவனும், தன் கடைக்கண்ணோக்கால், துன்பமெல்லாம் தீர்ப்பவனும், திக்குகளையே ஆடையாய் அணிந்து அம்மணமாய்த் திரிபவனுமான சிவனைக் கண்டு, நான் உளம் மகிழ்கிறேன்.

வாழ்க்கைக்கு ஆதாரமானவனும், கொடியொத்த கழுத்து நாகத்தின் செங்கபில நிற நாகமாணிக்கம் எங்கும் ஒளிவீசித் தென்படத் திகழ்பவனும், பல திசைகளும் நிறைந்து (உன்னைப் போற்றும்) மாதரின் முகங்களில், அந்த மாணிக்கத்தின் கதிர்கள் பலவண்ணக் கோலமிடவும், மதயானையின் உருபோர்த்து அருளொளி வீச அமர்ந்திருப்பவனுமாகிய சிவனைக் கண்டு என்னுள்ளம், களித்தாடுகின்றது.

சகோரப்பறவையின் தோழனை (நிலா) தலையணிகலனாகக் கொண்டவனும், செந்நாகத்தால் கட்டிய திருச்சடையைக் கொண்டவனும், அரி – இந்திராதி தேவர்களின் தலையிலிருந்து விழுந்த மலர்களின் மகரந்தத் தாதினால் சாம்பல் நிறமாகக் காணப்படும் பாதங்களை உடையவனுமான ஈசன் எமக்கு சகல வளங்களும் நல்குக.
தேவநாகரி.

இளம்பிறை சூடிய அழகனும், காமனைக் காய்ந்த நுதல்விழிகோண்டவனும் தேவர்களால் துதிக்கப்படுபவனு்மான ஈசனின்ன் திருச்சடையைப் பணிந்து நாம் சகல சித்திகளையும் அடைவோமாக..

முக்கண்ணனும், நுதல்விழியிலிருந்து தகதகவென எரியும் தீயால், காமனை எரித்தவனும், மலையரசன் மகளின் மார்பில் தொய்யில் எழுதி மகிழ்பவனுமான ஈசனைப் பணிகின்றேன்.

உலகெலாம் தாங்குபவனும், பிறையணி அழகனும், பொன்னார் மேனியனும், கங்கையணி வேணியனும், முகில் நிறைந்த
இரவை ஒத்த கருநிறக் கழுத்தனுமான ஈசன் எமக்கு மங்கலம் அருள்க!

உலகன் கரும்பாவன்கள், மலர்ந்த நீலத்தாமரைகள் எனக் காட்சியளிக்கும் கறைக்கண்டனும், மதனனை எரித்தவனும், முப்புரம் காய்ந்தவனும், பற்றுக்களை அறுப்பவனும், தக்க வேள்வியை அழித்தவனும், அந்தகனை வதைத்தவனும், கயாசுரனை அழித்தவனும் இயமனை உதைத்தவனும் ஆன ஈசனைப் பணிகின்றோம்..

வண்டார்க்கும் கடம்ப மலர்களைச் சூடியவனும், மதனன், முப்புரம், பற்றுக்கள் வேள்சி, அந்தகன், கயாசுரன், இயமன் ஆகியோரை ஒழித்தவனுமான ஈசனைப்
பணிகின்றோம்.

திமிதிமி என மிருதங்கம் ஒலியெழுப்ப, அதற்கு இசைந்தாடுபவனும், நுதல்விழியில் தீயைக் கொண்டவனும், தீகக்கும் மூஉச்சைக் கொண்ட நாகம் சீறத் திகழ்கின்றான் சிவன்.

மக்களையும் மன்னனையும் நான் ஒன்றாகப் பார்ப்பதெப்போ? புல்லொத்த விழிகளையும் தாமரைக் கண்ணையும் நான் ஒன்றாகக் காண்பதெப்போ? நண்பரையும் எதிரிய்யையும் நான் ன்றாக எண்ணுவதெப்போ? மணியையும் மண்ணையும் ஒன்றெனச் சொல்வதெப்போஒ? மாலையையம் பாம்பையும் ஒன்றெனச் சூடுவதெப்போ? சொல்க என் இறைவா!

கங்கைக் கரைக் குகையில் நான் வாழ்வதெப்போ? என்னேரமும் சிரமேல் கைதூக்கி, என் கொடுங்குணங்கள் கரைந்தோடுமாறு உன் நாமங்களைச் சொல்லி நான் மகிழ்ச்சியாக இருப்பதேப்போ? அதிரும் நுதல்விழி கொண்டவனே, சொல்க.


இம்மேலான துதியைப் பாடுவோர், ஞானகுருவாம் சிவனின் அருளும், புனிதமும் பெறுவர். அறியாமை நீங்கி சங்கரன் அருளைப் பெற, இதைவிட வேறு இலகுவான வழியில்லை…

தினமும் மாலையில், பிரதோச வேளையில், பூசையின் முடிவில், தசவக்கிரன் பாடிய இச்சிவதுதியைக் கூறி ஈசனைத் தியானிப்போர், திருமகளும், நாற்படையும் சூழ வளங்கொண்டு விளங்குவாராக.

இதி ஸ்ரீராவண க்ருதம்
சிவ தாண்டவ ஸ்தோத்திரம்
சம்பூர்ணம்…


தென்நாடுடைய சிவனே போற்றி
என்நாட்டவர்க்கும் இறைவா போற்றி
கயிலைமலையானே போற்றி போற்றி
இறை அருளால் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க எல்லா உயிர்களும் அன்புற்று வாழ்க நல்லோர் நினைத்த நலம் பெறுக..


Thursday, July 25, 2024

108 Sivan temples special information | 108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்

 108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள் | 108 Sivan temples special information
பல ஆன்மீக நூல்களில் இருந்து தொகுத்து எடுக்கப்பட்ட சிவன் கோவில்கள் 




1 திருகுடந்தை – ஊழ்வினை பாவம் விலக

2 திருச்சிராப்பள்ளி – வினை அகல

3 திருநள்ளாறு – கஷ்டங்கள் விலக

4 திருவிடைமருதூர் – மனநோய் விலக

5 திருவாவடுதுறை – ஞானம் பெற

6 திருவாஞ்சியம் – தீரா துயர் நீங்க

7 திருமறைக்காடு – கல்வி மேன்மை உண்டாக

8 திருத்தில்லை – முக்தி வேண்ட

9 திருநாவலூர் – மரண பயம் விலக

10 திருவாரூர் – குல சாபம் விலக

11 திருநாகை ( நாகப்பட்டினம் ) – சர்ப்ப தோஷம் விலக

12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) –  முக்தி வேண்ட

13 திருவண்ணாமலை – நினைத்த காரியம் நடக்க

14 திருநெல்லிக்கா – முன்வினை விலக

15 திருச்செங்கோடு – அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய

16 திருகருக்காவூர் – கர்ப்ப சிதைவு தோஷம் விலக

17 திரு வைத்தீஸ்வரன் கோவில் – நோய் விலக

18 திருகோடிக்கரை – பிரம்ம தோஷம் விலக

19 திருக்களம்பூர் – சுபிட்சம் ஏற்பட

20 திருக்குடவாயில் ( குடவாசல் ) – இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய

21 திருசிக்கல் ( சிக்கல் ) – துணிவு கிடைக்க

22 திருச்செங்காட்டங்குடி – கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக

23 திருக்கண்டீச்சுரம் – நோய் விலக , தீராத புண் ஆற

24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) – குடும்ப கவலை விலக

25 திருக்கருவேலி (  கருவேலி ) –  குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க


26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் ) –  முன் ஜென்ம பாவம் விலக

27 திருச்சத்திமுற்றம் – மண வாழ்க்கை கிடைக்க

28 திருப்பராய்துறை ( திருச்சி ) – கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற

29 திருநெடுங்களம் ( திருச்சி ) – தீரா துயரம் தீர ( இடர் களைய )

30 திருவெறும்பூர் ( திருச்சி ) – அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற

31  திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) – யம பயம் விலக

32 திருவையாறு – அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

33 திருவைகாவூர் – வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க

34 திருக்கஞ்சனூர் – திருமண தோஷம் விலக

35 திருமங்கலக்குடி ( சூரியனார் கோவில் ) – குழந்தை பாக்கியம் பெற

36 திருமணஞ்சேரி – திருமண தோஷம் விலக

37 திருமுல்லைவாயில் – சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக

38 திருவெண்காடு –  ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை

39 திருநெல்வேலி – பிராமண குற்றம் விலக

40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் – முக்தி வேண்ட

41 திருவாலவாய் ( மதுரை ) – தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட


42 திருப்பரங்குன்றம் ( மதுரை ) – வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட

43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் – தீரா பாவம் விலக

44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் – மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் ) – தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக

46 திருவக்கரை – செய்வினை தோஷம் விலக

47 திருவேற்காடு – வாணிப பாவம் விலக

48 திருமயிலாப்பூர் – மூன்று தலைமுறை தோஷம் விலக

49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு) – காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

50 திருவாலங்காடு – வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக

51 திருவேட்டிபுரம் ( செய்யாறு ) – ஞானம் கிடைக்க

52 திருப்பனங்காடு – பந்த பாசத்தில் இருந்து விலக

53 திருவூறால் (தக்கோலம்) – உயிர்வதை செய்த பாவம் விலக

54 திருப்பாச்சூர் – குடும்ப கவலைகள் நீங்க

55 திருவெண்ணைநல்லூர் – பித்ரு தோஷம் விலக

56 திருவதிகை – நல் மனைவி அமைய

57 திருவாண்டார் கோவில் – முக்தி வேண்ட

58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் ) – தீரா பாவம் விலக

59 திருக்கருவூர் ( கரூர் ) – பசுவதை செய்வதன் வழிபட

60 திருப்பாண்டி ( கொடுமுடி ) – பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக

61 திருக்கொடுங்குன்றம் ( பிரான்மலை ) –  மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட

62 திருகோகர்ணம் ( கர்நாடகம் ) – தேவ தோஷம் விலக

63 திருப்புகலூர் – பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க

64 திருத்தோணிபுரம் ( சீர்காழி ) – குல சாபம் நீங்க

65 திருவைத்தீஸ்வரன் கோவில் – பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக

66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு) – கர்வத்தால் குரு துரோகம்

67 திருப்பனந்தாள் – பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக

68 திருப்புறம்பயம் – மரண பயம் விலக

69 திருநெய்த்தானம் – மோட்ஷம் வேண்ட

70 திருவானைக்கா – கர்மவினை அகல

71 திருவேதிக்குடி – தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக

72 திருவலஞ்சுழி – வறுமை அகல

73 திருநாகேஸ்வரம் – ஸர்ப்ப ஸாபம் விலக

74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) – நவகிரஹ தோஷம் விலக

75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்) – வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக

76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் ) – சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர

77 திருசெம்பொன்பள்ளி – வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க

78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு) – அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக

79 திருவன்னியூர் ( அன்னூர் ) – சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட

80 திருநன்னலம் ( நன்னிலம் ) – ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட

81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) – கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக

82 திருமருகல் – கணவன் மனைவி அன்புடன் வாழ

83 திருச்சிக்கல் – பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட

84 திருச்சேறை – இல்லறம் மேலும் சிறக்க

85 திருக்கோளிலி ( திருக்குவளை ) – நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட

86 திருவாய்மூர் – செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

87 திருநெல்லிக்கா – கல்வி மேன்மை அடைய

88 திருவெண்டுறை ( வண்டுறை ) – வறுமையிலிருந்து விலக

89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குளம் ) – வினைகள் விலக

90 திருஆலங்குடி  – புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற

91 கொட்டாரம் – அமைதி பெற

92 திட்டை – சந்திர தோஷம் விலக

93 பசுபதி கோவில் – இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட

94 கொட்டையூர் – செய்த பாவங்கள் வேயொரு வீழ

95 ஓமாம்புலியூர் – சனி தோஷம் விலக

96 தருமபுரம் – சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக

97 மயிலாடுதுறை  – அனைத்து பாவங்களும் விட்டோட

98 உத்தரகோச மங்கை – கர்மவினைகள் அல்ல

99 இராமேஸ்வரம்  – பித்ரு தோஷம் விலக

100 காளையர்கோவில் – பிறவி பயன் கிடைக்க

101 பெண்ணாடம் – ஊழ்வினை தோஷம் அகல

102 இராஜேந்திரப்பட்டினம் – கர்மவினை அகல

103 அவினாசியப்பர் – ஏழு தலைமுறை பாவங்கள் விலக

104 குரங்கினில் முட்டம் – நினைத்த காரியம் நடக்க

105 பவானி – பித்ரு தோஷம் போக்க

106 ஆச்சாள்புரம் – மண வாழ்க்கை சிறக்க

107 ஆடுதுறை – திருஷ்டி தோஷம் விலக

108 சங்கரன்கோவில் – ஸர்ப்ப தோஷம் விலக

Wednesday, July 17, 2024

முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள்

 🌺 முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள்🌺

‌🌿🌿அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான, ‘அக்னி தீர்த்தம்’ எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.

 திருச்சியில் ரங்கநாதபெருமாள் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில், தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன்னுடைய தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது தல வரலாறு.

 சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட, அவர்களின் வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம்.

 கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அத்தல குளக்கரையில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் தீர்த்தால் சவுபாக்கிய வாழ்வு கிடைக்கும்.

 கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் தர்ப்பணம் செய்து, கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான, தர்மங்கள் செய்தால் நன்மைகள் உண்டாகும்.

 காசியின் அருகில் உள்ள விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்களைப் பெறலாம்.

 காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில்தான் ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றியதாக தல புராணம் கூறுகிறது.

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே

🌹🌹🌹


Tuesday, May 28, 2024

பவள மல்லி மரம் தல விருட்சமாக உள்ள கூறைநாடு புனுகீஸ்வரர் சிவன் கோவில் பற்றிய சிறப்பு பதிவு

 பவள மல்லி மரம் தல விருட்சமாக உள்ள கூறைநாடு புனுகீஸ்வரர்
சிவன் கோவில்
பற்றிய சிறப்பு பதிவு


பவளமல்லி பூவின் சிறப்புகள்:


பவளமல்லிகை புஷ்பம் ஒரு தெய்வீக மலராகக் கருதப்படுகிறது.

தேவலோகத்தில் உள்ள
ஐந்து புனிதமான மரங்களில் பவளமல்லிமரமும் ஒன்று
என புராணங்கள் கூறுகிறது.

பவளமல்லி பார்ப்பதற்கு மிக அழகானதும், நறுமணம் மிகுந்ததுமான அபூர்வமான மலராகும்.

இது சவுகந்தியா என்ற ஆபரணத்தை போன்ற தோற்றம் கொண்டிருக்கிறது.

பவளமல்லிக்கு மற்றொரு பெயர் பாரிஜாதம் ஆகும் .

இலக்கியத்தில் சேடல் என்று அழைக்கப்படுகிறது.

புட்ப விதி என்னும் நூலில் பவள மல்லிகையை சண்பக‘ஞாழல் கோட்டூப்பூவகை’ என்று கூறப்பட்டுள்ளது.

பவள மல்லிகை பூஜைக்கு உரிய மலராகும்

அதாவது, நாற்பது வகையான கோட்டூப் பூ வகைகளில் பவளமல்லியும் ஒன்று.

இந்த மரம் முன்னிரவில் பூத்து மணம் வீசி சூரிய உதயத்துக்கு முன்பே மண்ணில் உதிர்ந்து விடும்.

பொதுவாக இந்த மரம் ஆவணி, புரட்டாசி மாதங்களில் பூத்துக் குலுங்கும்.

இறைவனின் பூஜைக்குரிய மலர்கள் அனைத்தும் செடிகளில் இருந்துதான் பறிக்கப்படும்.

பொதுவாக மண்ணில் உதிர்ந்து கிடக்கும் பூக்களை பூஜைக்கு பயன்படுத்தமாட்டார்கள்.

ஆனால், இதற்கு பவள மல்லி விதிவிலக்காக உள்ளது.

இது இரவில் பூத்து அதிகாலையில் உதிர்வதால் அப்படி உதிர்ந்த பவளமல்லிப் பூக்களை சேகரித்துத் தொடுத்து இறைவனுக்கு பயன்படுத்துவார்கள்.

பவளமல்லிமரம் மூன்று இலை தொகுப்புகளைக் கொண்டது.

இவற்றில் மும்மூர்த்திகளும் உறைந்திருப்பதாக ஐதீகம்.

மத்தியில் மகாவிஷ்ணுவும், வலது பக்கத்தில் பிரம்மாவும், இடது பக்கத்தில் சிவபெருமானும் இருப்பதாக நம்பப்படுகிறது.

பவளமல்லி சிறு மரமாகக் காணப்படுகிறது.

இந்தியா முழுவதும் பரவலாக பவளமல்லியை பார்க்கலாம்.

1500 அடி உயரம் வரையுள்ள இடங்களில் வளரக்கூடியது. 

சுமார் 15 அடி உயரம்வரை வளரும்.

தண்டுபாகம் நான்கு பட்டைகளை உடையது. இலைகள் சற்றுநீண்டு முட்டைவடிவில் சொரசொரப்புடன் இருக்கும்.

பூக்கள் எட்டு இதழ்களுடன் வெண்மையாகவும், காம்பு பவள (சிவப்பு) நிறத்திலும் பார்ப்பதற்கு அழகாகவும், நறுமணத்துடனும் இருக்கும்.

இதன் கனிகள் வட்டவடிவில் உறை அமைப்பில் இருக்கும்.

செடியில் இருந்து உதிரும்போது இருபகுதியாக பிரிந்து விழும்.

அதில் ஒவ்வொரு பாகத்திலும் சிறியவிதை இருக்கும்.

அந்த விதையை எடுத்து தொட்டிகளில் ஊன்றி புதிய செடியை உருவாக்கலாம்.

சூரியனை பார்த்து மலராத பவளமல்லி புஷ்பத்தின் காரணத்தை உணர்த்தும் புராணக் கதை!

இந்த அற்புதச் செடியைப்பற்றி வாயு புராணம் இவ்வாறு தெரிவிக்கிறது.

பாரிஜாதம் என்ற இளவரசி சூரியனை திருமணம் புரிய விருப்பம் கொண்டிருந்தாள்.

ஆனால், சூரியன் இளவரசியை ஏற்கவில்லை.

இதனால் பாரிஜாதம் மனம் உடைந்து தீயில் குதித்து தனது இன்னுயிரை விடுத்தாள்.

இளவரசி பாரிஜாதம் தீயில் எரிந்த சாம்பலில் இருந்துதான் பாரிஜாதம் என்ற செடி உருவானது.

சூரியன் பாரிஜாதத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த செடி பகலில் சூரியனை பார்த்து பூப்பதைத் தவிர்த்து இரவில் மட்டுமே பூத்துக் குலுங்குகிறது.

இதனால்தான் இதனை வருந்தும் மரம் என்றும் அழைப்பார்கள்.

தன்னைக் கைவிட்ட சூரியனைப் பார்ப்பதை தவிர்ப்பதற்காக இரவில் மட்டுமே பூக்களைத் தரும் மரமாக இருந்து, கண்ணீராக பூக்களைச் சொரிகிறாள் என்றும் விளக்குவார்கள்.

பாரிஜாதம் என்ற இந்த பவளமல்லி, திருமாலுக்கு உகந்தது.

பவளமல்லி வேரில் சிரஞ்சீவியான ஆஞ்சநேயர் குடியிருப்பதாக நம்புகிறார்கள்.

தேவலோகத்தில் இருந்த இந்த பாரிஜாதமலர் வேண்டும் என்று சத்யபாமா, ருக்மிணி இருவரும் கிருஷ்ணபகவானிடம் கேட்கவே கிருஷ்ணர் பவளமல்லிமரத்தை கொண்டுவந்து சத்யபாமாவின் வீட்டுத் தோட்டத்தில் நட்டாராம்,

ஆனால், மரம் வளர்ந்து ருக்மிணி வீட்டில் பூக்களை உதிர்த்தது என்று
கூறப்படுகிறது.



கூறைநாடு புனுகீஸ்வரர் கோயில்!

மிருகங்கள் இறைவனைப் பூஜித்து பேறு பெற்ற தலங்கள் நம் நாட்டில் பல உண்டு.

குற்றாலம், திருவானைக்கா, மதுரை ஆகிய தலங்களில் யானையும்,
நல்லூரில் சிங்கமும், சாத்தமங்கையில் குதிரையும், கருவூர், பட்டீஸ்வரம, பேரூர் ஆகிய தலங்களில் பசுவும், சிவபுரத்தில் பன்றியும்,
தென் குரங்காடுதுறை, வடகுரங்காடுதுறை ஆகிய ஊர்களில் குரங்குகளும், சோலூரில் மீனும்,
திருத்தேவன் குடியில் நண்டும் பூஜித்து பேறு பெற்றன.

அதேபோல் புனுகுப் பூனை ஒன்று சிவபெருமானை மயிலாடுதுறைக்கு அருகேயுள்ள கூறைநாடு
எனும் தலத்தில் பூஜித்துப்
பேறு பெற்றது.

அதனாலேயே இங்குள்ள ஈசன் புனுகீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்.

அம்பாளின் பெயர் சாந்த நாயகி.

300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆலயம் இது.

ஆலயம் மேற்கு திசை நோக்கி அமைந்துள்ளது.

முகப்பில் நெடிதுயர்ந்த ஏழு நிலை ராஜ கோபுரம் உள்ளே நுழைந்ததும் விசாலமான மண்டபம்.

எதிரே பலிபீடமும், உயரமான கொடிமரமும். மண்டபத்தின் இடதுபுறம் அன்னை சாந்த நாயகியின் சந்நதியும் உள்ளது.

அம்பிகை நான்கு கரங்களுடன், நின்ற நிலையில் புன்னகை தவழ அருள் பாலிக்கிறாள்.

மேல் இரு கரங்களில் மாலையையும், தாமரை மலரையும் தாங்கி, கீழ்
இரண்டு கரங்களில் அபய,
வரத ஹஸ்த முத்திரைகளுடன் அன்னை திகழ்கிறாள்.

அடுத்துள்ள மகாமண்டப நுழைவாயிலில் துவாரபாலகர்கள் காவல்
காக்க, இறைவனின் அர்த்த மண்டபம் விளங்குகிறது.

கருவறையில் இறைவன் புனுகீஸ்வரர் லிங்கத் திருமேனியில் அருள்பாலிக்கிறார்.

இறைவனின் தேவக்கோட்டத்தின் வடபுறம் துர்க்கை, பிரம்மா, கிழக்கே லிங்கோத்பவர், தெற்கே தட்சிணாமூர்த்தி, ஜுரதேவர் போன்றோர் திருமேனிகள் உள்ளன.

உட்பிராகாரத்தின் மேற்கில் பிள்ளையார், வடக்கில் நடராஜர், சிவகாமி,
மகாலட்சுமி, சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், தெற்கில் நேசநாயனார், கிழக்கில் பைரவர், சூரியன் ஆகியோரை தரிசிக்கலாம்.

அம்மன் பிராகாரத்தின் வடக்குப் பகுதியில் சண்டிகேஸ்வரி அருள்பாலிக்கிறாள்.

வெளி பிராகாரத்தின் வடகிழக்கு மூலையில் கலசமண்டபம் உள்ளது.

இங்குள்ள சனி பகவான் கிழக்கு திசை நோக்கி
தரிசனம் அருள்கிறார்.

இந்த அமைப்பு அபூர்வமானது என்கின்றனர்.

இந்த ஆலயத்தின் தல விருட்சம் பவழமல்லி மரம்.

ஆலயத்தின் தீர்த்தமான திருக்குளம் ஆலயத்தின் தென்புறம் உள்ளது.

இந்த ஆலயம் வைத்தீஸ்வரன் கோயில் வைத்தியநாத சுவாமி ஆலயத்தைப் போன்ற வடிவமைப்பில் அமைந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

தல வரலாறு:

சிவபெருமான் எழுந்தருளியுள்ள மயிலாடுதுறைக்கு மேற்கே
பல நூற்றாண்டுகளுக்கு
முன் ஒரு காடு இருந்தது.

அரசு, கொங்கு, தேக்கு, அகில், சந்தனம், மூங்கில், நாவல், மா முதலிய மரங்கள் அடர்ந்து வளர்ந்து அது ஒரு அழகிய வனமாகத் திகழ்ந்தது.

பறவையினங்களும், விலங்கினங்களும் பகையின்றி அந்தக்
காட்டில் வாழ்ந்து வந்தன.

அங்கு தேவர்களும்,
திருமாலும், பிரம்மனும் வழிபடுவதற்காகவும், உயிரினங்கள் உய்யவும், பவழமல்லிகை நிழலில்
லிங்க வடிவில் தானே
தோன்றி சுயம்புவாக எழுந்தருளியிருந்தார் சிவபெருமான்.

அந்த வனத்தில் ஒரு புனுகுப் பூனை, தன் துணையுடனும், குட்டிகளுடனும் வாழ்ந்து வந்தது.

அதனிடமிருந்து வெளிப்பட்ட புனுகு வாசனை அந்த வனம் முழுவதும் ரம்மியமாகப் பரவியிருந்தது.

திடீரென்று ஒருநாள் அந்தப் புனுகு பூனைக்கு ஞானம் வந்தது.

“இதுவரை சாதாரணமான செயல்களையே செய்து வாழ்ந்து விட்டோமே!

இது என்ன வாழ்க்கை!

சிவபெருமானை வணங்கி பேரருளைப் பெற வேண்டும்” என அந்தப்பூனை நினைத்தது.

யானை, குதிரை, பசு, எருது, பன்றி, குரங்கு, பாம்பு, நண்டு, வண்டு, ஈ, எறும்பு, முயல், தவளை ஆகியன எல்லாம் இறைவனைப் பூஜித்து
நற்பேறு பெற்றுள்ளன.

நாமும் அவ்வாறே நற்கதியடைய வேண்டும்
என்று எண்ணிய அந்தப்
பூனை சிவபெருமானின் லிங்கத் திருமேனியைத்தேடி அலைந்தது.

வயல் சூழ்ந்த ஒரு சோலையில் பவழமல்லிகை மரத்தடியில் இறைவனின் லிங்கத் திருமேனியைக் கண்டது
அந்தப் பூனை.

மட்டற்ற மகிழ்ச்சி கொண்டு லிங்கத்திருமேனி முழுவதும் புனுகினை அப்பியது.

வில்வத் தளிர்களை வாயினால் கவ்வி இறைவனின் முடியில் சாத்தியது.

இறைவனை வலம்வந்து வணங்கியது.

இப்படியே சிவபெருமானைப் பல நாட்கள் அந்தப் புனுகுப்பூனை வணங்க
மனம் மகிழ்ந்த இறைவன் அதற்கு தேவ வடிவைக் கொடுத்து கயிலாயத்திற்கு அழைத்துக்கொண்டார்.

புனுகுப்பூனைக்கு இறைவன் அருள்புரிந்தமை அறிந்த பிரம்மன், திருமால், தேவர்கள் அனைவரும் பவழ மல்லிகை நிழலில் சிவபெருமான் அமர்ந்திருந்த இடத்தை வந்தடைந்து பணிந்து
துதித்துப் பாடினர்.

‘இவரே புனுகீசர்’ என்று அந்த இறைவனுக்குப் பெயரிட்டு வணங்கினர்.

சோழ மன்னன் தன் காலத்தில் காட்டுப் பகுதியை அழித்து புனுகீசருக்கு அதே இடத்தில் ஒரு ஆலயத்தை அமைத்தான்.

இதுவே இந்த ஆலயத்தின் தல வரலாறு.

இந்தப் புனுகுப்பூனை பற்றிய இன்னொரு தல வரலாறும் உண்டு.

சிவபெருமானை மதியாமல் தட்சன் யாகம் நடத்தினான்.

தேவேந்திரன் அந்த யாகத்தில் கலந்து கொண்டதால் சிவபெருமானின் சினத்திற்கு ஆளாகி சாபம் பெற்றான்.

அந்த தேவேந்திரனே இறைவன் மகிழும் வண்ணம் புனுகுப்பூனை வடிவெடுத்து பூஜை செய்து சாப விமோசனம் அடைந்து, இழந்த இந்திர பதவியை மீண்டும் பெற்றான் என இன்னொரு தல வரலாறு கூறுகிறது.

இந்த ஆலயத்தில் உள்ள சுவாமி விமானம் கருங்கல்லினால் ஆனவர்.

ஆலயத்தின் உள்ளே தென்புறம் மிகப்பெரிய கல்யாண மண்டபமும், சுமார் 1500 பேர் அமர்ந்து சாப்பிடக்கூடிய உணவுக் கூடமும் உள்ளன.

மிகவும் குறைந்த வாடகைக்கு இதை மக்கள் பயன்படுத்தி மனம் மகிழ்கிறார்கள்.

ஐப்பசி பவுர்ணமியில் இறைவனுக்கு அன்னாபிஷேகம் நடைபெறுகிறது.

ஆயிரக்கணக்கில் பக்தர்கள் இதில் கலந்து கொண்டு பயன்பெறுகின்றனர்.

சித்திரை மாதம் நடைபெறும் பிரமோற்சவத்தின்போது
13 நாட்களும் இறைவனும் இறைவியும் வீதியுலா வருவதுண்டு.

இங்கு 63 நாயன்மார்களின் உற்சவத் திருமேனிகள் கண்களைக் கவரும்
வண்ணம் உருவாக்கப்பட்டுள்ளது.

ஆண்டுக்கு ஒருமுறை
மூல நட்சத்திரத்தில் 63 நாயன்மார்களும் வீதியுலா வருவதுண்டு.

நவராத்திரி நாட்களில் தினசரி இங்குள்ள துர்க்கைக்கு விதவிதமாக அலங்காரம் செய்வதுண்டு.

தினசரி நான்கு கால பூஜை நடைபெறும் இந்த ஆலயம் காலை 6 முதல் இரவு 9 மணிவரை திறந்திருக்கும்.

கன்னிப் பெண்கள் இறைவிக்கு மாங்கல்யம் செய்து அணிவிக்க அவர்களுக்கு விரைந்து திருமணம் நடைபெறும் எனவும், அம்மனை அங்கப்பிரதட்சணம் செய்வதால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை பேருந்து நிலையத்துக்கு மேற்கே இரண்டு கி.மீ. தூரத்தில் உள்ளது கூறைநாடு.

பவளமல்லி மரம் தல விருட்சமாக இருக்கும் பிற ஆலயங்கள்:

தமிழகத்தில் திருக்களர் திருத்தலத்தில் உள்ள பாரிஜாதவனேஸ்வரர், மரக்காணத்தில் உள்ள பூமீஸ்வரர், சீர்காழியில்
உள்ள பிரம்மபுரீஸ்வரர், தென்குரங்காடுதுறையில் உள்ள ஆபத்சகாயேஸ்வரர், திருநாரையூர் சித்தநாதீஸ்வரர், திருவைகுண்டத்தில் உள்ள கண்ணபிரான், திருக்கடிகை திருமால் கோயில் ஆகிய தலங்களில் பவளமல்லி தலவிருட்சமாக உள்ளது.

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...