Sunday, January 14, 2024

திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில்🪷🪷கோபுர தரிசனம் கோடி🪷🪷புண்ணியம் தினம் ஒரு திருக்கோயில்🪷🪷

 🛕தினம் ஒரு திருக்கோயில்:-🔔

*🛕கோபுர தரிசனம் கோடி புண்ணியம்:*🪔

            🙏🙏🙏🙏🙏


🪷🪷🪷 திருவரங்குளம் அரங்குள நாதர் கோயில்


🪷 மூலவர் :
 🙏அரங்குள நாதர்
(ஹரதீர்த்தேசுவரர்)

🪷 தாயார் :
 🙏பெரியநாயகி அம்பாள்
(பிரகதாம்பாள்)

🪷 தல விருட்சம்
 🙏 பொற்பனை

🪷 மாவட்டம் :
 🙏புதுக்கோட்டை

🪷 ஊர்:
 🙏திருவரங்குளம்

 தல வரலாறு;

🪷 2000ம் வருடங்களுக்கு முன் கரிகால சோழன் காலத்தில் கட்டப்பட்ட கோவில். இக்கோவிலில் ஒரு குளம்  உள்ளது அக்குளத்து மட்டத்துக்கு லிங்கம் காணப்படவதால் அரங்குலநாதர்/ஹரதேஸ்வரர் என்று பெயர் பெற்றது.

🪷 அந்த  சுவாமியின் பெயர் மருவி திருவரங்குளம் என்று ஊரின் காரண பெயராக அமைந்தது.  அம்பாளுக்கு இது பூர நட்சத்திர கோவில்.   இந்த கோவில் ராஜாக்கள் வேட்டையாடி வந்த போது பனை மரம் இருந்தது.

🪷இந்த பழங்கள் தங்க பழமாக காட்சி அளித்தது.  அந்த  பழத்தின் பெயர் பொற்பனை.  அங்கு இருக்கும் விநாயகர் பெயர் பொற்பனை விநாயகர் என்று பெயர்.  இங்கு இருந்து 3 மைல் தொலைவில் முனிஸ்வரர் கோவில் உள்ளது.

🪷இந்த முனீஸ்வரர் பெயர் பொற்பனை முனீஸ்வரர்.  இந்த முனீஸ்வரர்  புதுகோட்டை மாவட்டம் காவல் தெய்வம்.  மூலாதார சக்தி உடைய அம்மனாக கருதப்படுகிறது.

🪷 வடநாட்டு செட்டியார் என்ற  பிரிவினர்கள் இக்கோவிலுள்ள தானியத்தை கண்டுபிடித்து ராஜாக்களிடம் ஒப்படைத்தனர்.  அம்பாளே செட்டியாரின் குழந்தையாய்  பிறந்து அவர்களின் குழந்தை பாக்கியத்தை தீர்த்தாள் மறுபடியும் இறைவனிடம் சேர்ந்தார்.


 பிரார்த்தனை:

🪷 குழந்தை இல்லாதவர்கள், கல்யாணமாகதவர்கள், அம்பாளை வழிபட்டு பலன்  அடையாலம்.  பூர நட்சத்திரம் உடையவர்கள் கல்யானமகதவர்களாக இருந்தால் அவர்கள் இக்கோவிலை வழிபட்டால் உடனே பலன்  அடையாலம்.  ஏனென்றால் அம்பாளுக்கும் பூர நட்சத்திரம் இருந்து கல்யாணம் நடைபெற்றதால் இங்கு பூர நட்சத்திரம்  உடையவர்கள் பலன் அடையாலம்.

 முகவரி:

🪷அருள்மிகு அரங்குலநாதர் திருக்கோவில்,

திருவரங்குளம், புதுக்கோட்டை-
622 505,

     🕉 சிவாய நம:

No comments:

Post a Comment

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...