Showing posts with label இன்றைய கோபுர தரிசனம். Show all posts
Showing posts with label இன்றைய கோபுர தரிசனம். Show all posts

Sunday, June 30, 2024

நம்முடைய பிரச்சனைகளை தீர்க்கும் பதினொரு அற்புத ஆலயங்கள்…!

 நம்முடைய. பிரச்சனைகளை தீர்க்கும் பதினொரு அற்புத ஆலயங்கள்…!

 
1) தீராத நோய்கள் தீர்ந்திட , மருத்துவத்துறைக்கே சவாலாக உள்ள பலவிதமாக நோய்கள் நீங்கிட, அருள்பாலிக்கும் அற்புத தளம் திருவெற்றியூர் ஸ்ரீபாகம்பிரியாள் அம்மன் சமேத வல்மிகநாதர் திருக்கோவில்.
தர்மதேவதையின் சாபத்தால் சங்கரணராகிய மகாவிஷ்ணுக்கே காலில் ஏற்பட்ட புற்றினை நீக்கியவர் இத்தலத்து நாயகனான ஈசனே பழம்புற்று நாதர். இன்னும் மருந்துகளே கண்டுபிடிக்க படாத பலவிதமான நோய்கள் இத்தலத்தில் நொடியினில் நீங்குகிறது‌. தீராப் பிணிகளும் நீங்குகிறது. சர்வரோக நிவாரணியாக விளங்கும் புனித நீரான வாசுகி தீர்த்த திருக்குளம். இத்தீர்த்த குளத்தில் புனிதநீராடுவது என்பது மிகச்சிறப்பு.
இத்தலம் திருவாடானைக்கு தென்கிழக்கே 10.கி மீ தொலைவில் உள்ளது
2) மன நோய் அகற்றும் “திருவிடை மருதூர்
சிவ பெருமான் தன்னை தானே பூஜித்து,வழிபட்ட லிங்கமானதால் இவர் “மகாலிங்கமானார்”.
இவரை தரிசிப்போர் மன நோய் நீங்கப் பெறுவர். நீண்ட நாட்கள் நோயால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள், இத் தலநாயகனை வழிபட்டு வந்தால் குணம் அடைவர்.
மன நோய் கொண்டுள்ளோர், இத் திருக் கோயிலின் வெளிச் சுற்றை வலம் வந்தால் குணம் பெறுவர்.
கும்பகோணத்தில்இருந்து மாயவரம் செல்லும் சாலையில் சுமார்10 கி.மீ. தொலைவில் உள்ளது இத் திருத் தலம்
3). புற்றுநோய் தீர்க்கும் திருந்துதேவன் குடி அருமருந்தம்மை” புற்று நோய்தீர்க்கும் தலம்- திருந்துதேவன்குடி கற்கடேஸ்வரர் திருக்கோவில்.
கற்கடேஸ்வரர் வீற்றிருக்கும் ” திருந்துதேவன்குடியின் ” நாயகி, தீராநோய்கள் தீர்க்கும் அருமருந்தம்மை. இங்கு,அம்மனுக்கு சார்த்தப்படும் எண்ணெய்,பின்னர் வேண்டுவோர்க்கு, பிரசாதமாய் வழங்கப்படுகிறது.
இது, சர்வவியாதிகளுக்குமான ஒரு நிவாரணி. அதிலும், மிக குறிப்பாக, புற்று நோய் தீர்க்கும் மருந்தாக கருதப்படுகிறது.
நோய் தீர்க்கும் தலம் இது என்பதை உணர்த்தும் வண்ணம்,வைத்தியர் ஒருவரின் சிற்பம் ஒன்று கோயிலின் வெளிப்புறம், அவர் மருந்து தயாரிப்பதைப் போல் சித்தரிக்கப்பட்டுள்ளது.
4). கடன் தொல்லைகள் தீர்க்கும் “திருச்சேறைருண விமோச்ச னர்”
கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் திருவாரூர் வழியில்அமைந்துள்ளது ” திருச்சேறை உடையார் கோவில் “. இங்கு தனி சந்நதியில் ” ருணவிமோச்சனராய் ” அருள்பாளிக்கிறார்பரமேஸ்வரன்.
தொடர்ந்து 11திஙகிழமைகள் அர்ச்சனை செய்து, 11 வது வாரம் அபிஷேக ஆராதனை செய்யஅனைத்து வித கடன் தொல்லைகளும் தீர்கிறது. இச் சந்நதியின் முன் நின்று “கூறை உவந்தளித்த கோவே யென்று அன்பர் தொழச் சேறை உவந்திருந்த சிற்பரமே ” எனமனமுருக 11 முறை பாராயணம் செய்தால் மிகச் சிறந்த பலன் கிடைக்கும்
ஒருவர் முற்பிறவிகளில் செய்த பாவங்கள் அனைத்தும் அடுத்த்தடுத்த பிறவிகளில் தொடர்கிறது. முன்வினைப் பயன்கள் அனைத்தும் பிறவிக் கடன்களாகின்றன.
முற் பிறவி தீவினைகள் நீங்கவும், இப் பிறவியின் கடன்கள் தீரவும், வறுமை நீங்கி சுபிட்சமான வாழ்க்கை கிடைத்திடவும் வணங்க வேண்டிய இறைவன், திருச்சேறையில் செந்நெறியப்பர் ஆலயத்தில், தனி சந்நதி கொண்டுள்ள ” ரிண விமோஷன லிங்கேஸ்வரர் “. கும்பகோணம் – திருவாரூர் சாலையில் கும்பகோணத்தில் இருந்து சுமார் 15 கி.மீ. தொலைவில் உள்ளது இத் தலம்.
ரிண விமோஷனரை 11 திங்கட்கிழமைகள் அபிஷேக, ஆராதனை செய்து வழிபட்டு, பின்னர் மகாலஷ்மியையும், ஜேஷ்டா தேவியையும், பைரவரையும் வணங்கினால் வழிபடுபவரது வறுமையும், கடன்களும் தீரும்.
இத் தலத்தில் துர்க்கை சிவ துர்க்கை, விஷ்ணு துர்க்கை, வைஷ்ணவி என மூன்று வடிவங்களாக அருளுகிறாள்.
மாசி மாதத்தில் 13,14,15 தேதிகளில் சூரியனது கிரணங்கள் இறைவன் மீதும், இறைவி மீதும் நேரடியாக விழுவது சிறப்பு.
5) சங்கடங்கள் தீர்க்கும் “திருபுவனம் சூலினி, பிரத்தியங் கரா சமேத சரபேஸ்வரர்
கடன் தொல்லைகளில் இருந்து விடுபட, வழக்குகளில் வெற்றியடைய, பில்லி,சூனியம், ஏவல்களில் இருந்து விடுபட பரமேஸ்வரன், சரபேஸ்வரராய் வீற்றிருந்துஅருள்பாளிக்கும் ” திருபுவனம் ” சென்று வழிபடலாம்.
இவர் வழிபடுபவரின் அனைத்துசங்கடங்களையும் தீர்ப்பவர். சூலினி,பிரத்தியங்கரா என தன் இரு தேவியருடன் தனி சந்நதி கொண்டு வீற்றிருக்கும் சரபரை11 விளக்குகள் ஏற்றி, 11 முறை சுற்றி வந்து, 11வாரங்கள் வழிபட சங்கடங்கள் அனைத்தும்தீர்ந்து சுக வாழ்வு கிடைக்கும். சரபரை வழிபட ஞாயிற்று கிழமை ராகு கால வேளைசிறந்தது.

பிரிந்திருக்கும் தம்பதியர் ஒன்று சேர ,வணங்க வேண்டிய ஸ்தலம் “ஸ்ரீவாஞ்சியம்” :
மன வேறுபாட்டால் பிரிந்து வாழும் தம்பதியர் ஒன்று சேர வழிபட வேண்டிய திருத் தலம், காசிக்கு இணையாக கருதப்படும், கும்பகோணத்தை அடுத்துள்ள “ஸ்ரீவாஞ்சியம்”.
காசி தேசத்தில் புண்ணியமும் வளரும். பாவமும் வளரும். ஆனால் இங்கு புண்ணியம் மட்டுமே வளரும். ராகுவும், கேதுவும் ஒரே திருமேனியில் காட்சி தரும் இத் தலம் பிள்ளைப் பேறு அருளும் தலம்.
ஏழரை, அஷ்டம மற்றும் கண்டகச் சனி திசைப் பரிகாரத் தலமாகும். இங்கு ஆயுஷ் ஹோமம், சஷ்டியப்த பூர்த்திகள் செய்ய நீண்ட ஆயுள் கிட்டும்.
இங்குள்ள குப்த கங்கையில் நீராடி பித்ரு காரியங்களைச் செய்தால் பித்ரு தோஷ நிவர்த்தி கிடைக்கும். ராகு கேதுவை வழிபட கால, சர்ப்ப தோஷம் நீங்கும்.
இத் தலத்தில் ஓர் இரவு தங்கினாலேயே செய்த பாவங்கள் அனைத்தும் தீர்ந்து முக்தி கிடைக்கும். ஸ்ரீயாகிய திருவை (மஹாலஷ்மி) பரந்தாமன் தனது வாஞ்சையில் விரும்பி சேர்த்ததால் இத் தலம் ஸ்ரீவாஞ்சியம் எனப் பெயர் பெற்றது.
இங்குள்ள குப்த கங்கையில் நீராடி இறைவனையும், அம்பாளையும், மஹாலக்ஷ்மியையும் வழிபட்டால் பிரிந்துள்ள தம்பதியர் பிணக்குகள் அனைத்தும் தீர்ந்து ஒன்று சேர்வர்.


7.) அட்சரப்பிரயாசம் (எழுத்தறிவு) பெற “இன்னம்பூர் எழுத்தறிநாதர்
அகத்திய முனிவர் இத் தலம் வந்து எழுத்தறிநாதரை வழிபட்டு இலக்கணங்களைகற்றுக் கொண்டதால், இன்றளவும் இத் தலத்தில் சிறு பிள்ளைகளுக் கானஅட்சரப்பியாசம் நடைபெறுகிறது.
குழந்தைகளை பெற்றவர் இத் தலம் அழைத்துவந்து இங்குள்ள நாதனின் முன்பாக எழுத்துபயிற்சி தருகின்றனர்.
இத் தல நடராஜரின் விக்கிரகத்தில் இடப் பக்கம் கங்கா தேவியும்வலப் பக்கம் நாகமும் காட்சியளிப்பது அற்புதமான காட்சி. இத் தலம் சஷ்டியப்தபூர்த்தி, பீம ரத சாந்தி ஹோமங்கள் செய்ய மிகச் சிறந்தது


8) தடைபட்ட திருமணம் நடக்க“கோனேரிராஜபுரம் (திருநல்லம்)” : முக்கண்ணன், “உமா மகேஸ்வரராய்”

 


 


மேற்கு நோக்கி வீற்றிருக்க, “அங்கவள நாயகியாய்” அம்பாள் கிழக்கு நோக்கி வீற்றிருப்பது, இருவரும் மாலை மாற்றிக் கொள்ளும் வண்ணம் அமர்ந்திருப்பதாய் ஐதீகம்.


பூமாதேவி, ஈஸ்வரனை பூஜிக்க வேண்டி, தேவ சிற்பி விஸ்வகர்மா ஆலயம் அமைக்க, தேவகுரு பிரகஸ்பதி மகேஸ்வரனை பிரதிஷ்டை செய்த,திருமணத் தடை அகற்றும் திருக் கோயில் இது. இத் தல நாயகனையும், அம்பாளையும் வழிபட்டால், தடைபட்ட திருமணங்கள் இனிதே நிறைவேறும். ”
பொல்லாத் துயரையும் பொடிப் பொடியாக்கும் இறைவன் ” என இத் தல நாயகனை திருநாவுககரசர் பாடியுள்ளார்.
இத் தலத்தில், நோய் தீர்க்கும், ” ஸ்ரீ வைத்திய நாதர் ” சந்நதியும் அமைந்துள்ளது. இத் தலம்,திருவி டை மருதூரிலிருந்து சுமார் 10 கி.மீ. தொலைவில் உள்ளது. கும்பகோணம் – வடமட்டம் பேருந்து வழித் தடத்தில்,கோனேரிராஜபுரம் என்ற பஸ் நிறுத்தத்தில் இருந்து 1 கி,மீ. தொலைவில் ஆலயம் உள்ளது.


9) தீரா நோய்கள் தீர்க்கும். “வைத்தீஸ்வரன் கோவில் வைத்திய நாதர்”- மயிலாடுதுறை –

சீர்காழி வழித் தடத்தில் அமைந்துள்ள நோய் தீர்க்கும் திருத் தலம் ” வைத்தீஸ்வரன் கோவில் “. செவ்வாய் தோஷம் நீக்கும் ” அங்காரகனுக்குரிய ” திரு கோயிலான இது ஒரு பிரார்த்த னை திருத்தலம். வேண்டுபவரது பிரார்த்தனைகள் அனைத்தும் நிறைவேற்றும் வைத்யநா தர்,தையல் நாயகி சமேதராய் அருளும்திருக்கோயில் இது.


இங்குதான் முத்துசாமிதீட்சிதர் பதிகம் பாடி கண்ணொளி பெற்றார்.18 சித்தர்களில் ஒருவரான, நோய்கள் தீர்க்கும் “தன்வந்திரி” இத் தலத்திற்கு உரியவர்.
அப்பர் பாடிய தேவாரத்திற்கு ஏற்ப, இத் தலத்தில் தரப்படும் மருந்து உருண்டையைஉட்கொண்டு, இத் தல சித்தாமிர்த திருக்குளத்து நீரை பருகினால் தீராதவியாதிகள் அனைத்தும் தீரும் என்பது நிச்சயம். இங்குள்ள சடாயுகுண்டத்தில் உள்ளசாம்பலை பூசிக்கொள்ள நோய்கள் தீருகின்றன


10) செல்வம் பெற வணங்க வேண்டிய தலம் “திருவாடுதுறை கும்பகோணம் –



மாயவரம் சாலையில் கும்பகோணத்திலிருந்து சுமர் 10 கி.மீ.தொலைவில் உள்ளது ஆடுதுறை எனப்படும் “திருவாடுதுறை”. ஞானசம்பந்தரி டம் அவர்தந்தை யாகம் செய்ய தேவையான பொருள்கேட்க, சம்பந்தரும் இத் தல இறைவன் மாசிலாமணி ஈஸ்வரரை வேண்டி பதிகம் பாட,பரம் பொருளும் 1000 பொற்காசுகள் கொண்ட பொற்கிளியை பலி பீடத்தின் மீது வைத்தருளினார்.


11.) சரஸ்வதி கடாட்சம் தரும் “கூத்தனூர்”:

 


 



மாணவர்கள் கல்விச் செல்வம் பெறவும்,கலைமகளின் பரிபூரண அருளை பெறவும்வழிபட வேண்டிய தலம்.
ஞானசரஸ்வதி காட்சி தரும் “கூத்தனூர்”. நமது பிறப்புகள் அனைத்திலும் நம்முடன் வருவது நாம் பெற்ற கல்விச் செல்வம் மட்டுமே.
மயிலாடுதுறை –
திருவாரூர் வழித் தடத்தில் பேரளத்தை அடுத்து அமைந்துள்ளது ஞான சக்தியாய் மகா சரஸ்வதி அருளும் கூத்தனூர். வெண்ணிற ஆடை உடுத்தி, வெண் தாமரையில் கிழக்கு முகமாய் வீற்றிருக்கும் சரஸ்வதி தேவி ஆய கலைகள் அனைத்தையும் அருள்பவள். இவள் வாக்கு வன்மையை தருபவள். வாழ்வில் உயர அனைவரும் வழிபட வேண்டியவள். ஞானம் அருள்பவள்.

Sunday, February 11, 2024

🙏இன்றைய கோபுர தரிசனம்🙏🕉அருள்மிகு பிராணேஸ்வரி, பிராணாம்பிகை தாயார் உடனுறை தர்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் திருக்கோவில்🕉

 🙏இன்றைய கோபுர தரிசனம்🙏🕉

திங்கட்கிழமை
 12.02.2024


 🕉அருள்மிகு பிராணேஸ்வரி, பிராணாம்பிகை தாயார் உடனுறை தர்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீஸ்வரர் திருக்கோவில்🕉


🔆திருநள்ளாறு,
காரைக்கால் மாவட்டம்,
புதுச்சேரி மாநிலம்

 

 

 

 


 

 

 

 

🔆எப்போதும் மனிதர்கள் தாங்கள் கஷ்டப்படும் காலங்களில் இறைவனை வழிபட்டு தங்களின் குறைகளை கூறி வழிபடுவர், ஆனால் தனது சக்தி மிகுந்த தாக்கத்தால் தெய்வங்களையே ஆட்டிப்படைத்தவர், நவகிரகங்களில் ஒரு மனிதனுக்கு ஆயுளை நிர்ணயிப்பவராகவும், எமனுக்கு சகோதரனும், காகத்தை வாகனமாக கொண்டவரான சனிபகவான்

🔆இந்த சனி பகவான் சனீஸ்வர பட்டதோடு வீற்றிருக்கும் “திருநள்ளாறு ஸ்ரீ தர்பாரண்யேஸ்வரர்” கோவில், சுமார் 3000 ஆண்டுகளுக்குமேல் பழமையான கோவிலான இந்த ஆலயத்தின் இறைவனான சிவ பெருமான் தர்பாரண்யேஸ்வரர் என்றும் இறைவி பிராணேஸ்வரி என்றும் அழைக்கப்படுகிறார்கள்

🔆இந்த கோவிலின் சிவபெருமான் தர்பை புல்லிலிருந்து தோன்றியதால் இவருக்கு “தர்பாரண்யேஸ்வரர்” என்ற பெயர் ஏற்பட்டது, நெடுங்காலத்திற்கு முன்பு வாழ்ந்த நளன் எனும் அரசன் தமயந்தி என்னும் பேரழகு வாய்ந்த இளவரசியை மனைவியாக அடைந்ததை பொறுக்க முடியாத தேவர்கள், சனீஸ்வர பகவானிடம் சென்று நளனை பிடித்து தகுந்த பாடம் கற்று கொடுக்குமாறு கூறினார்

🔆 சனீஸ்வர பகவானும் நளனை ஏழரை நாட்டு சனியாக பிடித்து கொண்டார், இதனால் அரசனாக இருந்த நளன் தனது மனைவி தமயந்தி மற்றும் குழந்தைகளை பிரிந்ததுடன் தனது நாடு, ராஜ்ஜியம் என அனைத்தையும் இழந்து ஏழரை ஆண்டு காலம் மிகுந்த துன்பங்களை அனுபவித்தான்

🔆ஏழரை ஆண்டுகள் கழித்து இந்த திருநள்ளாறு கோவிலுக்கு வந்த நளன், இக்கோவில் குளத்தில் நீராடி இங்கு வீற்றிருக்கும் சனி பகவானை வழிபட்ட பின் தான் முன்பு இழந்த தனது குடும்பம், நாடு , ராஜ்ஜியம் என அனைத்தையும் திரும்ப பெற்று இன்பமாக வாழ்ந்தான், நளன் நீராடிய தீர்த்தம் இன்றும் “நள தீர்த்தம்” என அழைக்கப்படுகிறது

🔆ஏழாம் நூற்றாண்டில் சமண மதத்தினரின் ஆதிக்கம் அதிகமிருந்த போது “திருஞானசம்பந்தர்” சைவ மதமே உண்மையானது என்று நிரூபிக்க இந்த கோவிலின் இறைவனான தர்பாரண்யேஸ்வரரை போற்றி இயற்றிய பதிகம் கொண்ட ஓலை சுவடிகளை தீயிலிட்ட போது அந்த ஓலைச்சுவடிகள் எரியாமல் அப்படியே இருந்ததால்!, அதை “பச்சை பதிகம்” என அழைத்தனர்

🔆 இதன் மூலம் சைவ மதம் உண்மையானது என நிரூபித்தார் திருஞானசம்பந்தர், தமிழகத்தில் மீண்டும் சைவம் தழைக்க ஆரம்பித்தது, இக்கோவிலின் சிறப்பே இங்கு நவகிரக நாயகர்களின் வலிமை வாய்ந்தவரும், ஆயுள்காரகனும் ஆன “சனி பகவானுக்கு” விஷேஷ சந்நிதி இருப்பதும், அவருக்கு ஆகம விதிப்படி பூஜைகளும் செய்யப்படுவதும் தான்

🔆 இத்தலத்தில் சிவபெருமானை வழிபட்டு தனது குறை நீங்க பெற்ற சனிபகவான் சனி என்ற பெயரோடு ஈஸ்வர பட்டத்தையும் சேர்த்து சனீஸ்வரன் என அழைக்கப்படுகிறார், இரண்டரை ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் சனி பெயர்ச்சியின் போது பல லட்சக்கணக்கான பக்தர்கள் சனி பகவானை வழிபடுகின்றனர்

🔆 ஜாதகத்தில் “ஏழரை சனி, அஷ்டம சனி, அர்த்தாஷ்டம சனி, மங்கு சனி” ஆகிய கெடுதலான சனி பகவானின் கோட்சாரம் பெறுபவர்கள் இக்கோவிலுக்கு வந்து எண்ணெய் தேய்த்து “நள தீர்த்தத்தில்” நீராடி சிவ பெருமானையும், சனீஸ்வரரையும் வழிபட சனி பகவானால் தீமையான பலன்கள் ஏற்படாமல் நன்மைகள் நடக்க தொடங்கும்🙏🕉

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...