Tuesday, April 30, 2024

பால காண்டம் திருமாலின் ராம அவதாரம்

 திருமாலின் ராம அவதாரம்

 

 

பால காண்டம்

திருமாலின் ராம அவதாரம்

💠 கோசல நாடு கங்கை நதிபாயும் நீர் வளமும், நிலவளமும், குடிவளமும் கொண்ட வளமை மிகுந்த நாடாகும். கோசல நாட்டின் தலைநகரம் அயோத்தி ஆகும். இந்நகரத்தில் வாழும் மக்கள் அனைவரும் தருமகுணசீலர்கள். அயோத்தி என்ற சொல்லுக்கு புத்தம் இல்லாத ஊர் என்று பொருள். அயோத்தி நகரம் போரும் சினமும் இன்றிச் சாந்தமாக திகழ்ந்தது.

💠 அயோத்தி மாநகரை ஆதித்தன் குலத்தில் அஜமகா ராஜனுக்கும் இந்துமதிக்கும் மகனாக பிறந்த தசரத சக்ரவர்த்தி மக்களுக்கு நல்லாட்சி புரிந்து வந்தார். இவருடைய ஆட்சியில் தருமம் தழைத்து நின்றது. மக்கள் துன்பம் இன்றி இன்பமாக வாழ்ந்தார்கள். தசரத மன்னருக்கு கௌசலை, கைகேயி, சுமித்திரை என்று மூன்று மனைவியர் இருந்தார்கள். இவருக்கு மக்கட்பெறு இல்லாததால் இவர் வேறு வேறு மாதர்களை திருமணம் செய்து கொண்டார். அவ்வாறு செய்துகொண்ட பெண்கள் மொத்தம் 360 பேராகும். இவர் அறுபதினாயிரம் ஆண்டுகள் நல்லற நாயகனாக அரசு புரிந்தார்.

💠 தசரதர் மன்னர் தமக்குப் பின் தருமநெறி தவறாமல் தரணியை அரசு புரிய ஒரு மகன் பிறக்கவில்லையே என்று பெரிதும் வருந்தினார். அரசவையில் தசரத சக்ரவர்த்தி, தமது குலகுருவாகிய வசிஷ்ட முனிவரை வணங்கி, குருநாதா! அடியேன் தங்கள் ஆசியினால் இந்த உலகத்தில் பத்து திசைகளிலுமிருந்து வந்த பத்து ரதங்களை வென்று, தசரதன் என்று பேர் பெற்றேன். சம்பரனை வென்று இந்திரனுக்கு உதவி புரிந்தேன். ஆனால் தங்கள் அடியெனுக்கு மகப்பேறு வாய்க்கவில்லை. யாழ் என்ற இன்னிசைக் கருவிகளின் நாதங்களைக் கேட்கும் என் செவியில் அப்பா! என்று அழைக்கும் மழலை சொல் கேட்கும் பாக்கியம் பெற்றெனில்லை என கூறி மிகவும் வருந்தினார். தாங்கள் பிரம புத்திரர். அடியெனுக்கு மகப்பேறு உண்டாக அருள்புரிய வேண்டும் என்று கூறி முறையிட்டார்.


💠 வசிஷ்ட முனிவர் ஊனக்கண்களை மூடினார். அப்பொழுது அவருக்கு ஞானக்கண் திறக்கப்பெற்றது. அதில் முனிவர் கண்ட காட்சி,

💠 திருமால் திருப்பாற்கடலில் அரவணையில் அறிதுயில் புரிகின்றார். இராவணாதி அரக்கர்களால் பலகாலமாக துன்பப்படுகின்ற பிரமாதி தேவர்கள் நாராயணரிடம் தஞ்சம் புகுந்து கருணைக்கடலே! கமலக்கண்ணா! நாங்கள் இராவணன் முதலிய அரக்கர்களால் பஞ்சுபடாத பாடுபடுகின்றோம். தாங்கள் அசுர குலத்தை அழித்து, நாங்கள் செழித்து வாழ அருள் புரியவேண்டும் என்று சரண் அடைந்தார்கள்.

💠 திருமால் தேவர்களை நோக்கி அமரர்களே! நான் பூவுலகில் இராமனாக அவதரித்து இராவணாதி அரக்கர்களை அழித்து தங்களது துயர் நீக்கி அருள் புரிவேன். ஆகவே, நான் மனிதனாக வந்து அவதரிப்பேன். தேவர்களாகிய நீங்கள் முன்னதாகவே வாநரங்களாகப் பிறந்து இருங்கள் என்று கட்டளையிட்டார். திருமாலின் கட்டளையின்படி,

💠 வானவர்கள் வாநரங்களாகப் பிறந்தார்கள். இந்திரன் வாலியாகப் பிறந்தான். சூரியன் சுக்கிரீவனாகப் பிறந்தான். அக்கினித்தேவன் நீலனாகப் பிறந்தான் (நீலன் சேனை தலைவன்). விசுவபிரம்மா நளனாகப் பிறந்தான், வாயுதேவன் அனுமனாகப் பிறந்தான். ருத்ராம்சமும் அதில் கலந்து நின்றது. உபேந்திரன் அங்கதனாகப் பிறந்தான். பிரமதேவர், நான் ஏற்கெனவே கரடிக் குழுத் தலைவன் ஜாம்பவந்தனாகப் பிறந்திருக்கிறேன் என்றும் கூறினார்.
 


ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி--கஜேந்திர மோட்சம் உற்சவம் !

 ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி--கஜேந்திர மோட்சம் உற்சவம் !
    🌕🐘🙏🌕🐘🤚🌕🐘🤚

"மீனமர் பொய்கை நாண் மலர்
கொய்வான்,வேட்கையினோடு சென்று இழிந்த-
கானமர் வேழம், கை எடுத்து அலறக்,கரா வதன் காலினைக் கதுவ,
ஆனையின் துயரம் தீரப், புள்ளூர்ந்து சென்று நின்று, ஆழி தொட்டானை,
தேனமர் சோலை மாட மாமயிலைத் திருவல்லிக்கேணிக் கண்டேனே !"
 (பெரிய திருமொழி 2-3-9)

--"மீன்கள் அமர்ந்ததொரு தடாகத்திலே புதிய புஷ்பங்களைப் பறிக்க வேணும், என்கிற விருப்பத்தோடு போய் இறங்கின காட்டில் திரியும் கஜேந்திரன், தனது துதிக்கையை உயரத் தூக்கிக் கூச்சலிடும்படியாக, முதலையானது அந்த யானையின் காலைத் கௌவிக் கொள்ள, அந்த யானையினுடைய மனவருத்தம் தீரும்படி பெரிய திருவடியை வாகனமாகக் கொண்டு பொய்கைக் கரையிலே எழுந்தருளி அங்கே நின்று திருவாழியை அந்த முதலையின்மீது பிரயோகித்த பெருமானை, தேன்மாறாத சோலைகளையுடைய மாடம் மா மயிலை திருவல்லிக்கேணி கண்டேன்."

ஸ்ரீரங்கத்தில் சித்ரா பெளர்ணமி அன்று நம்பெருமாள் தென் திருக்காவேரிக்கு எழுந்தருளி,காவிரி ஆற்றில் யானை கஜேந்திரனுக்கு மோட்சம் அளிக்கும் வைபவம் விமரிசையாக நடைபெறுகிறது
இந்த உற்சவம் திருவூறல் உற்சவம் என்றும் அழைக்கப் படுகிறது.

இந்த ஆண்டு சித்ரா பெளர்ணமியான நேற்று காலை(23/04) நம்பெருமாள் காலை 7 மணிக்குப் புறப்பட்டு வழிநடை உபயங்கள் கண்டருளி காலை 10.30க்கு தென் திருக்காவேரிக் கரையில் உள்ள அம்மா மண்டபத்தில் எழுந்தருளினார்.
பகல் 12 மணியிலிருந்து 2 மணி வரை திருமஞ்சனம் கண்டருளி பக்தர்களுக்குச் சேவை சாதித்தார்.

1.கஜேந்திர ஆனைக்கு  மோட்சம் அருளும், குட பால ஆனை !

  🙏🐘🐘🤚🐘🐘🤚🐘🐘🤚🙏

தென் ஆனாய்(திருமாலிருஞ் சோலை அழகர்),
வட ஆனாய் (திருவேங்கடவர்),
குட பால ஆனாய்(மேற்கில் திருவரங்கர்)
குணபால மத ஆனாய்(கிழக்கில் திருக்கண்ணபுரம் செளரிராஜர்)-- இமையோர்க்கு என்றும் முன்னானாய்,
பின்னானார் வணங்கும் சோதி !
திரு மூழிக் களத்தனாய் முதலானாயே !(திருநெடுந்தாண்டகம்-10)

மாலை 6 மணிக்குப் புறப்பட்டு காவிரிக்கரைக்கு எழுந்தருளி,காவிரி ஆற்றில் நின்று கொண்டிருந்த பெரிய கோயில் யானை ஆண்டாளுக்கு அநுக்ரஹம் செய்தார்.யானையின் சிரசில்,அர்ச்சகர்கள் நம்பெருமாளின் திருவடிகளான ஸ்ரீ சடகோபம் சாதித்தனர்.யானையின் நெற்றியில் பெருமாள் அருளித்தந்த சந்தனம் சாத்தப்பட்டது. அதன்பின் நம்பெருமாள் அம்மா மண்டபம் திரும்பினார்.அங்கு மங்கள ஆரத்தி ஆன பின் பொதுமக்கள் சேவை முடிந்து இரவு 8.15க்குப் புறப்பட்டு ஆஸ்தானம் அடைந்தார்.

2.நம்பெருமாள் நடையழகுக்கு ஈடாகப் பாடிய நல்லரையர்:
   🔔🔊🕪🕩🔉📢📣📯🕭
ஒரு திருவூறல் உற்சவத்தில்--சித்ரா பௌர்ணமியன்று,தென்திருக்காவேரியிலிருந்து,புறப்பட்ட போது,(ஸமரபூபாலன் என்னும் கேடயம் போன்ற வாகனத்தில்)
அரையரிடம்,"நம் நடையழகுக்கு ஈடாகப் பாடும்" என்று நியமித்தார்.அரையர் அவ்வாறே நமபெருமாளை இசையில் ஏத்திக் கொண்டு கோவில் ஆஸ்தானம் வந்தார்.2.5 கி.மீ.தூரம் பின்னோக்கி
(பின்புறம் திரும்பாமல்),
நம்பெருமாள் நடையழகுக்குத் தக்க, தாள இசையுடன் பாடிக் கொண்டு வந்தார்!!.இந்த வைபவம், இன்றும் ஒவ்வொரு சித்ரா பௌர்ணமியன்றும் நடைபெறுகிறது.

3.கஜேந்திர மோட்சம் உணர்த்தும் தத்துவம் :
    🙏👣🙏👣🙏👣🙏👣🙏👣🙏
கஜேந்திராழ்வான் எம்பெருமான் திருவடிகளுக்குச் சாற்றுகைக்காகத் தாமரை மலர் பறித்த போது,முதலை கஜேந்திரன் காலைக் கவ்வித் துன்புறுத்தியது.அது போல,
எம்பெருமான் மீது பக்தி கொண்டுள்ள  நம்மை ஐம்புலன்கள்(கண்,வாய்,மூக்கு,
காது,மெய்(உடம்பு) ஆகியவை தங்கள் ஆயுதங்களான காட்சி,சுவை/வாக்கு,மணம், ஒலி,ஸ்பர்ஸம்  ஆகியவற்றின் மூலம்  அடிமைப் படுத்தி) என்னும் முதலை கவ்வித் துன்புறுத்துகிறது.
கஜேந்திரன்"நாராயாணா! ஓ!மணி வண்ணா!! நாகனையாய்!! வாராய்! என் ஆரிடரை நீக்காய்"என்று  ஓலமிட்ட போது,எம்பெருமான் ஓடோடி வந்து காப்பாற்றியது போல,நாமும் எம்பெருமான் திருவடிகளில் சரணடைந்து,அவன் நாமங்களைப் பக்தியுடன் சொன்னால் கடுக வந்து,
 அந்தக் கொடிய ஐம்புலன் பிடியிலிருந்து,நம்மை விடுவித்து உய்விப்பார்

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...