கோபுர தரிசனம் என்றும் கோடி புண்ணியம் தருமே
அருள்மிகு ஸ்ரீ ஸ்ரீதேவி ,பூதேவி உடனுறை ஸ்ரீரங்கநாத பெருமாள் திருக்கோவில்.
18.5 அடி நீளமும் 5 அடி உயரத்துடன் காணப்படும் பெருமான் இறைவனின் உருவம், சாளக்கிராம கல்லால் செய்யப்பட்டது.
திருவிழாக்கள்
ராம நவமி, பங்குனி உத்திரம், வைகுண்ட ஏகாதசி இங்கு கொண்டாடப்படுகிறது.
காலம்
1000 – 2000 ஆண்டுகள் பழமையானது.
ஆதிசேசன் என்படும் ஐந்து தலைகள் கொண்ட நாகப் பாம்புவின் மீது சயன திருக்கோலத்தில் ஸ்ரீரங்கநாத பெருமாள் பள்ளிக்கொண்ட நிலையில் காட்சியளிக்கிறார். இவரது நாபியின் மீது பிரம்மா உள்ளார். இறைவனின் பாதித்திற்கு அருகில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார் இருவரும் அமர்ந்து, களைப்பில் இருக்கும் பெருமாளுக்கு சேவை செய்து கொண்டிருக்கின்றனர்பெருமாளின் திருவடியை சேவித்த நிலையில், தும்புறு மகரிஷியும், பக்த ஆஞ்சநேயரும் காட்சி தருகின்றனர்.
இந்த இடமானது தேவர்களால் தானமாக வழங்கப்பட்ட இடம் என்று கூறப்படுகிறது. இதனால் அந்த ஊர் தேவதானம் என்று அழைக்கப்பட்டது.
தேவதானம்.
( வட ஸ்ரீரங்கம் )
திருவள்ளூர் மாவட்டம்.
No comments:
Post a Comment