Thursday, December 28, 2023

ஸ்ரீபாபநாசநாதர் கோவில் 🛕தினம் ஒரு திருக்கோயில்:🔔🛕 கோபுர தரிசனம் கோடி புண்ணியம். 🪔

 🪷🪷🪷 ஸ்ரீபாபநாசநாதர் கோவில்🪷🪷🪷




🪷 மூலவர்:
     
    🙏பாவவிநாசநாதர்.

 🪷 தாயார்:
     
    🙏உலகம்மை.

🪷 விருட்சம்:
     
    🙏முக்கிளா மரம்.

🪷 தீர்த்தங்கள்:
     
    🙏தாமிரபரணி
     
    🙏வேத தீர்த்தம்
     
    🙏பைரவ தீர்த்தம்,
     
    🙏கல்யாண தீர்த்தம்.

🪷 மாவட்டம்:
     
    🙏திருநெல்வேலி

🪷 ஊர்:
     
    🙏பாபநாசம்

 தல வரலாறு:

🪷இந்து சமயப் புராண வரலாற்றின்படி, இறைவன் சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனது.

🪷 அகத்தியரின் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி இறைவனை வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அகத்தியருக்கும் லோபமுத்திரைக்கும் இத்தலத்தில் இறைவன் தன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார்.

🪷 இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது.

🪷மற்றொரு மரபு வரலாற்றில், உரோசம முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டு அம்மலர்கள் கரைசேர்ந்த இவ்விடங்களில் சிவாலயங்கள் அமைந்து சிவனை வழிபட்டதாகவும், அவற்றில் முதலாவது மலர் கரைசேர்ந்த பாபநாசத்தில் அமைத்த கோயில் பாபநாசநாதர் கோயிலெனக் கூறப்பட்டுள்ளது.

🪷 இக்கோயில் சிவவடிவான இலிங்கமானது நவகோள்களில் ஒன்றான சூரிய தேவனின் அம்சமாக கருதப்படுகிறது. கைலாயநாதரை முதன்மைக் கடவுளாகக் கொண்டு நவகோள்களுக்குரியவையாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோயில்களின் வரிசையில் முதலாவதான இக்கோயில் சூரியனுக்குரியதாகும்


 முகவரி:

🪷அருள்மிகு பாபநாசர் சுவாமி திருக்கோவில்,
அம்பாசமுத்திரம் வட்டம்,பாபநாசம்,
திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி-04634-293757

    🕉 சிவாய நமஹ🙏


No comments:

Post a Comment

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...