🪷🪷🪷 ஸ்ரீபாபநாசநாதர் கோவில்🪷🪷🪷
🪷 மூலவர்:
🙏பாவவிநாசநாதர்.
🪷 தாயார்:
🙏உலகம்மை.
🪷 விருட்சம்:
🙏முக்கிளா மரம்.
🪷 தீர்த்தங்கள்:
🙏தாமிரபரணி
🙏வேத தீர்த்தம்
🙏பைரவ தீர்த்தம்,
🙏கல்யாண தீர்த்தம்.
🪷 மாவட்டம்:
🙏திருநெல்வேலி
🪷 ஊர்:
🙏பாபநாசம்
தல வரலாறு:
🪷இந்து சமயப் புராண வரலாற்றின்படி, இறைவன் சிவனுக்கும் பார்வதிக்கும் கயிலை மலையில் நடந்த திருமணத்தை அகத்தியர் காண முடியாமல் போனது.
🪷 அகத்தியரின் இறைவனின் திருமணக் கோலத்தைக் காண விரும்பி இறைவனை வேண்டினார். அவரது விருப்பத்தை நிறைவேற்றும் வண்ணம் அகத்தியருக்கும் லோபமுத்திரைக்கும் இத்தலத்தில் இறைவன் தன் இறைவியுடன் திருமணக் கோலத்தில் காட்சியளித்தார்.
🪷 இக்கோயிலுக்கு அருகிலுள்ள அருவி அகத்தியர் அருவி என அழைக்கப்படுகிறது.
🪷மற்றொரு மரபு வரலாற்றில், உரோசம முனிவர் தாமிரபரணி ஆற்றில் ஒன்பது மலர்களை மிதக்க விட்டு அம்மலர்கள் கரைசேர்ந்த இவ்விடங்களில் சிவாலயங்கள் அமைந்து சிவனை வழிபட்டதாகவும், அவற்றில் முதலாவது மலர் கரைசேர்ந்த பாபநாசத்தில் அமைத்த கோயில் பாபநாசநாதர் கோயிலெனக் கூறப்பட்டுள்ளது.
🪷 இக்கோயில் சிவவடிவான இலிங்கமானது நவகோள்களில் ஒன்றான சூரிய தேவனின் அம்சமாக கருதப்படுகிறது. கைலாயநாதரை முதன்மைக் கடவுளாகக் கொண்டு நவகோள்களுக்குரியவையாக தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள நவகைலாய கோயில்களின் வரிசையில் முதலாவதான இக்கோயில் சூரியனுக்குரியதாகும்
முகவரி:
🪷அருள்மிகு பாபநாசர் சுவாமி திருக்கோவில்,
அம்பாசமுத்திரம் வட்டம்,பாபநாசம்,
திருநெல்வேலி மாவட்டம்.
தொலைபேசி-04634-293757
🕉 சிவாய நமஹ🙏
No comments:
Post a Comment