Thursday, July 25, 2024

108 Sivan temples special information | 108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள்

 108 பிரபல சிவன் கோயில்கள் தரிசன பலன்கள் | 108 Sivan temples special information
பல ஆன்மீக நூல்களில் இருந்து தொகுத்து எடுக்கப்பட்ட சிவன் கோவில்கள் 




1 திருகுடந்தை – ஊழ்வினை பாவம் விலக

2 திருச்சிராப்பள்ளி – வினை அகல

3 திருநள்ளாறு – கஷ்டங்கள் விலக

4 திருவிடைமருதூர் – மனநோய் விலக

5 திருவாவடுதுறை – ஞானம் பெற

6 திருவாஞ்சியம் – தீரா துயர் நீங்க

7 திருமறைக்காடு – கல்வி மேன்மை உண்டாக

8 திருத்தில்லை – முக்தி வேண்ட

9 திருநாவலூர் – மரண பயம் விலக

10 திருவாரூர் – குல சாபம் விலக

11 திருநாகை ( நாகப்பட்டினம் ) – சர்ப்ப தோஷம் விலக

12 திருக்காஞ்சி ( காஞ்சிபுரம் ) –  முக்தி வேண்ட

13 திருவண்ணாமலை – நினைத்த காரியம் நடக்க

14 திருநெல்லிக்கா – முன்வினை விலக

15 திருச்செங்கோடு – அர்த்தநாரீஸ்வரர் கோவில் மணவாழ்க்கை சிறப்புடைய

16 திருகருக்காவூர் – கர்ப்ப சிதைவு தோஷம் விலக

17 திரு வைத்தீஸ்வரன் கோவில் – நோய் விலக

18 திருகோடிக்கரை – பிரம்ம தோஷம் விலக

19 திருக்களம்பூர் – சுபிட்சம் ஏற்பட

20 திருக்குடவாயில் ( குடவாசல் ) – இறந்தவர் ஆன்மா சாந்தி அடைய

21 திருசிக்கல் ( சிக்கல் ) – துணிவு கிடைக்க

22 திருச்செங்காட்டங்குடி – கோர்ட் வம்பு , வழக்கு உள்ளவர்கள் தோஷம் விலக

23 திருக்கண்டீச்சுரம் – நோய் விலக , தீராத புண் ஆற

24 திருக்கருக்குடி ( மருதாநல்லூர் ) – குடும்ப கவலை விலக

25 திருக்கருவேலி (  கருவேலி ) –  குழந்தை பாக்கியம் பெற , வறுமை நீங்க


26 திருவழுந்தூர் ( தேரெழுத்தூர் ) –  முன் ஜென்ம பாவம் விலக

27 திருச்சத்திமுற்றம் – மண வாழ்க்கை கிடைக்க

28 திருப்பராய்துறை ( திருச்சி ) – கர்வத்தால் வீணானவர்கள் சுகம் பெற

29 திருநெடுங்களம் ( திருச்சி ) – தீரா துயரம் தீர ( இடர் களைய )

30 திருவெறும்பூர் ( திருச்சி ) – அதிகாரத்தால் வீழ்ந்தவர்கள் சுகம் பெற

31  திருப்பைஞ்ஞீலி ( திருச்சி ) – யம பயம் விலக

32 திருவையாறு – அக்னி தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

33 திருவைகாவூர் – வில்வ அர்ச்சனை செய்து பாவத்தை போக்க

34 திருக்கஞ்சனூர் – திருமண தோஷம் விலக

35 திருமங்கலக்குடி ( சூரியனார் கோவில் ) – குழந்தை பாக்கியம் பெற

36 திருமணஞ்சேரி – திருமண தோஷம் விலக

37 திருமுல்லைவாயில் – சந்திர திசை நடப்பவர்கள் சந்திர தோஷம் விலக

38 திருவெண்காடு –  ஊழ்வினை தோஷம் உள்ளவர்கள் கல்வி மேன்மை

39 திருநெல்வேலி – பிராமண குற்றம் விலக

40 திருக்குற்றாலம் குற்றாலநாதர் கோவில் – முக்தி வேண்ட

41 திருவாலவாய் ( மதுரை ) – தென்திசையில் குடியிருப்பவர்கள் நட்சத்திர தோஷம் உள்ளவர்கள் வழிபட


42 திருப்பரங்குன்றம் ( மதுரை ) – வாழ வழி தெரியாது தவிப்பவர்கள் வழிபட

43 திருவாடானை ஆதிரத்தினேசுவரர் கோவில் – தீரா பாவம் விலக

44 திருமுருகன் பூண்டி திருமுருகநாத சுவாமி கோவில் – மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

45 திருப்பாதிரிப்புலியூர் ( புட்லூர் ) – தாயை விட்டு பிரிந்து இருக்கும் குழந்தை தோஷம் விலக

46 திருவக்கரை – செய்வினை தோஷம் விலக

47 திருவேற்காடு – வாணிப பாவம் விலக

48 திருமயிலாப்பூர் – மூன்று தலைமுறை தோஷம் விலக

49 திருஅரசிலி ( ஒழுந்தியாம்பட்டு) – காமத்தால் பாதிக்கப்பட்டவர்கள் தோஷம் விலக

50 திருவாலங்காடு – வீண் வம்பில் மாட்டிக் கொண்டவர்கள் தோஷம் விலக

51 திருவேட்டிபுரம் ( செய்யாறு ) – ஞானம் கிடைக்க

52 திருப்பனங்காடு – பந்த பாசத்தில் இருந்து விலக

53 திருவூறால் (தக்கோலம்) – உயிர்வதை செய்த பாவம் விலக

54 திருப்பாச்சூர் – குடும்ப கவலைகள் நீங்க

55 திருவெண்ணைநல்லூர் – பித்ரு தோஷம் விலக

56 திருவதிகை – நல் மனைவி அமைய

57 திருவாண்டார் கோவில் – முக்தி வேண்ட

58 திருமுது குன்றம் ( விருத்தாசலம் ) – தீரா பாவம் விலக

59 திருக்கருவூர் ( கரூர் ) – பசுவதை செய்வதன் வழிபட

60 திருப்பாண்டி ( கொடுமுடி ) – பித்ரு தோஷம் , பிரேத சாபம் விலக

61 திருக்கொடுங்குன்றம் ( பிரான்மலை ) –  மறுபிறவி வேண்டாதவர்கள் வழிபட

62 திருகோகர்ணம் ( கர்நாடகம் ) – தேவ தோஷம் விலக

63 திருப்புகலூர் – பெரியோரை அவமதித்த குற்றம் நீங்க

64 திருத்தோணிபுரம் ( சீர்காழி ) – குல சாபம் நீங்க

65 திருவைத்தீஸ்வரன் கோவில் – பிணிகள் விலக , அங்கார தோஷம் விலக

66 திருக்கருப்பறியலூர் ( தலைஞாயிறு) – கர்வத்தால் குரு துரோகம்

67 திருப்பனந்தாள் – பிறன்மனை நாடியவர்கள் தோஷம் விலக

68 திருப்புறம்பயம் – மரண பயம் விலக

69 திருநெய்த்தானம் – மோட்ஷம் வேண்ட

70 திருவானைக்கா – கர்மவினை அகல

71 திருவேதிக்குடி – தான் எனும் அகம்பாவத்தால் சீரழிந்தவர்கள் தோஷம் விலக

72 திருவலஞ்சுழி – வறுமை அகல

73 திருநாகேஸ்வரம் – ஸர்ப்ப ஸாபம் விலக

74 திருநாகேஸ்வர சுவாமி ( கும்பகோணம் ) – நவகிரஹ தோஷம் விலக

75 திருநல்லம் (கோனேரிராஜபுரம்) – வேதத்தை பரிகசித்து அவலத்துக்கு உள்ளானவர்கள் தோஷம் விலக

76 திருத்தெளிச்சேரி ( காரைக்கால் ) – சூரிய தோஷம் உள்ளவர்கள் குறை தீர

77 திருசெம்பொன்பள்ளி – வீரபத்ரன் குல வம்சத்தினர் வணங்க

78 திருத்தலச்சங்காடு ( தலைச்செங்காடு) – அடிமையாட்கள் சாபம் பெற்றவர்கள் தோஷம் விலக

79 திருவன்னியூர் ( அன்னூர் ) – சோமாஸ்கந்தரை குலதெய்வமாக கொண்டவர்கள் வழிபட

80 திருநன்னலம் ( நன்னிலம் ) – ஞானம் வேண்டுபவர்கள் வேண்ட

81 திருராமனாதீச்சுரம் ( திருக்கண்ணாபுரம் ) – கணவனின் சந்தேகப் பார்வைக்கு உட்பட்ட பெண்களது தோஷம் விலக

82 திருமருகல் – கணவன் மனைவி அன்புடன் வாழ

83 திருச்சிக்கல் – பங்காளி பகை உள்ளவர்கள் வழிபட

84 திருச்சேறை – இல்லறம் மேலும் சிறக்க

85 திருக்கோளிலி ( திருக்குவளை ) – நவகோள்களால் பாதிக்கப்பட்டவர்கள் வழிபட

86 திருவாய்மூர் – செவ்வாய் தோஷம் உள்ளவர்கள் தோஷம் விலக

87 திருநெல்லிக்கா – கல்வி மேன்மை அடைய

88 திருவெண்டுறை ( வண்டுறை ) – வறுமையிலிருந்து விலக

89 திருக்கடிக்குளம் ( கற்பகநாதர்குளம் ) – வினைகள் விலக

90 திருஆலங்குடி  – புத்திர தோஷம் விலக , செல்வம் சேர்க்கை பெற

91 கொட்டாரம் – அமைதி பெற

92 திட்டை – சந்திர தோஷம் விலக

93 பசுபதி கோவில் – இராகு தோஷம் உள்ளவர்கள் வழிபட

94 கொட்டையூர் – செய்த பாவங்கள் வேயொரு வீழ

95 ஓமாம்புலியூர் – சனி தோஷம் விலக

96 தருமபுரம் – சிவனடியாரை அவமதித்த குற்றம் விலக

97 மயிலாடுதுறை  – அனைத்து பாவங்களும் விட்டோட

98 உத்தரகோச மங்கை – கர்மவினைகள் அல்ல

99 இராமேஸ்வரம்  – பித்ரு தோஷம் விலக

100 காளையர்கோவில் – பிறவி பயன் கிடைக்க

101 பெண்ணாடம் – ஊழ்வினை தோஷம் அகல

102 இராஜேந்திரப்பட்டினம் – கர்மவினை அகல

103 அவினாசியப்பர் – ஏழு தலைமுறை பாவங்கள் விலக

104 குரங்கினில் முட்டம் – நினைத்த காரியம் நடக்க

105 பவானி – பித்ரு தோஷம் போக்க

106 ஆச்சாள்புரம் – மண வாழ்க்கை சிறக்க

107 ஆடுதுறை – திருஷ்டி தோஷம் விலக

108 சங்கரன்கோவில் – ஸர்ப்ப தோஷம் விலக

Wednesday, July 17, 2024

முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள்

 🌺 முன்னோரை வழிபட சிறந்த ஆலயங்கள்🌺

‌🌿🌿அகிலம் காக்கும் தந்தை  அண்ணாமலையார் மலர் பாதம்‌ சரணம் . 🌿🌿

ராமேஸ்வரத்தில் 64 தீர்த்தக் கட்டங்களில் ஒன்றான, ‘அக்னி தீர்த்தம்’ எனப்படும் கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் சகல பாவங்களும் நீங்கும்.

 திருச்சியில் ரங்கநாதபெருமாள் பள்ளிகொண்டுள்ள ஸ்ரீரங்கத்தில், காவிரி நதிக்கரையில் சாஸ்திர விதிப்படி தர்ப்பணம் செய்தால், அபரிமிதமான பலன்கள் கிடைக்கும்.

கும்பகோணம், நன்னிலம், பூந்தோட்டம் ஆகிய தலங்களில் அருகே உள்ள திலதைப் பதியில், தர்ப்பணம் செய்து வழிபட்டால், முன்னோர்களின் ஆசி கிடைக்கும். ராமபிரான் தன்னுடைய தந்தைக்கு தர்ப்பணம் செய்த தலம் இது என்பது தல வரலாறு.

 சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் ஆலய திருக்குளக்கரையில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட, அவர்களின் வம்சம் தழைக்கும் என்பது ஐதீகம்.

 கடலூர் பாடலீஸ்வரர் ஆலயத்தில் உள்ள கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து, அத்தல குளக்கரையில் முன்னோர்களுக்கு நீத்தார் கடன் தீர்த்தால் சவுபாக்கிய வாழ்வு கிடைக்கும்.

 கும்பகோணம் மகாமகக் குளக்கரையில் தர்ப்பணம் செய்து, கரையில் உள்ள ஆலமரத்தடியில் தான, தர்மங்கள் செய்தால் நன்மைகள் உண்டாகும்.

 காசியின் அருகில் உள்ள விஷ்ணுகயா ஆலமரத்தடியில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ள விஷ்ணு பாதத்தில், முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் மகத்தான புண்ணியங்களைப் பெறலாம்.

 காஞ்சீபுரம் அருகே உள்ள திருப்புட்குழி விஜயராகவப் பெருமாள் ஆலயத்தில்தான் ராமபிரான், ஜடாயுவிற்கு நீத்தார் கடன் நிறைவேற்றியதாக தல புராணம் கூறுகிறது.

**சிவாய நம🙇 சிவமே ஜெயம் சிவமே தவம் . சிவனே சரணாகதி. சிவமே என்‌ வரமே

🌹🌹🌹


🌻மேல்மலையனூர் அங்காளம்மன்கோவில்🌻

 🌻மேல்மலையனூர்
அங்காளம்மன்கோவில்🌻



1. கணவனை பிரிந்து வாழும் பெண்கள் மேல்மலையனூரில் வழிபட உரிய பலன் கிடைக்கும்.

 

2. சில பெண்களை கணவன் அடிக்கடி துன்புறுத்துவது உண்டு. அப்படி பாதிக்கப்படும் பெண்கள் மலையனூர் வந்து அங்காளம்மனிடம் முறையிட பிரச்சினை தீரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.

 

3.மலையனூர் அங்காளம்மன் கோவில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவான சிறப்பு வாய்ந்தது.

 

4. ஆடி வெள்ளிக்கிழமை அங்காளம்மனுக்கு எலுமிச்சை பழ மாலை சாத்தி வழிபட்டால் அம்மன் மனம் குளிர்ந்து நம்மை ஆசீர்வதிப்பாள்.

 

5. மேல்மலையனூர் அங்காள பரமேஸ்வரிக்கு தாண்டேஸ்வரி என்ற பெயரும் உண்டு.

 

6. மலையனூர் புற்று மண்ணை 48 நாட்கள் நெற்றியில் பூசி வந்தால் சகல நன்மைகளும் தேடிவரும் என்பது ஐதீகம்.

 

7. மலையனூர் மண்ணில் காலடி எடுத்து வைத்தாலே போதும், கிரக தோஷங்கள் நிவர்த்தி ஆகிவிடும் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர்.

 

8. மலையனூரில் புற்றில் குடியேறிய அம்பிகையே ஆதிசக்தி என்று போற்றப்படுகிறார். அனைத்து யுகங்களுக்கும் முன்பே அவள் இத்தலத்துக்கு வந்து விட்டதாக ஆன்மீக பெரியோர்கள் கருதுகிறார்கள்.

 

9. அங்காளம்மனை ஆடி மாதம் ஒரு தடவையாவது சென்று வழிபட்டால், பக்தர்களை பிடித்த பீடை, தோஷம், பில்லி, சூனியம், காட்டேரி சேட்டை, ஏவல் போன்றவை தானாக விலகும்.

 

10. மேல்மலையனூருக்கு 3 அமாவாசை தொடர்ந்து வந்து அங்காளம்மனை வழிபட்டு ஊஞ்சல் ஊற்சவத்தை கண்டு வந்தால் குழந்தைப்பேறு, நோய் நிவர்த்தி, திருமண யோகம் ஆகியவை வந்து சேரும்.

 

11. அங்காளம்மனை குல தெய்வமாக கொண்டவர்கள் ஆடி மாதத்தில் ஒருநாள் சிறப்பு பூஜைகள் செய்து வழிபட்டால் கூடுதல் பலன்கள் கிடைக்கும்.

 

12. மலையனூரில் அங்காளம்மன் வடக்கு திசை நோக்கி இருந்து அருள்பாலித்து வருகிறார். இதனால் அம்மனின் அருள் பக்தர்களுக்கு அதிகமாக கிடைப்பதாக கூறப்படுகிறது.

 

13. மேல்மலையனூரில் அகோர உருவத்தில் ஆவேசம் அடைந்த அங்காள பரமேஸ்வரி, திருவண்ணாமலை சென்று பிரம்ம தீர்த்தத்தில் நீராடி சாபம் பெற்று, பிறகு மீண்டும் மலையனூர் வந்து அமர்ந்ததாகவும் தல வரலாற்றில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே திரு வண்ணா மலை செல்லும் பக்தர்கள் மலையனூர் வந்து செல்வது நல்லது என்று கூறப்படுகிறது.

 

14. மலையனூர் கருவறையில் வீற்றிருக்கும் அங்காளம்மனை நன்கு உன்னிப்பாக கவனித்தால் அவள் மூதாட்டி வடிவத்தில் இருப்பது தெரியவரும்.

 

15. தக்கனின் யாகத்தை அழிக்க யாகத் தீயில் விழுந்து தன் உடலை அழித்துக் கொண்ட தாட்சாயினியன் அம்சமே அங்காளி என்பதால் மலையனூர் அங்காளம்மன் தலத்தில் சாம்பலைத்தான் பிரசாதமாக தருகிறார்கள்.

 

16. அங்காளம்மனை தொடர்ந்து வழிபட்டால் ராகு-கேது தோஷ பாதிப்பு உங்களை நெருங்கவே நெருங்காது.

 

17. சென்னையில் சூளை, ராயபுரம், சாத்தங்காடு, மைலாப்பூர், சிந்தாதிரிப்பேட்டை, ஜார்ஜ்டவுன், நுங்கம்பாக்கம் என்று மாநகரின் பல்வேறு பகுதிகளிலும் அங்காளம்மமன் கோவில் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

 

18. திருவள்ளூர் அருகே புட்லூர் அங்காளம்மன் கோவிலும் மிகவும் பிரசித்தி பெற்றது. அரக்கோணத்தில் அமைந்துள்ள அங்காளம்மன் கோவிலில் மயானக் கொள்ளை நிகழ்ச்சி வெகு சிறப்பாக நடைபெறுவது வழக்கம்.

 

19. திருச்சி மாவட்டம் துறையூர் அங்காளம்மன் சயன கோலத்தில் இருப்பதால் அந்த கோவில் மிகவும் விசேஷமானது.

 

20. திருப்பூர் அருகே முத்தளம் பாளையம் என்னும் இடத்தில் வீற்றிருக்கும் அங்காளம்மன் சுயம்புவாகத் தோன்றியவர் என்று கூறப்படுகிறது.

 

21. அங்காளம்மன் ஆலயங் களில் மயானக்கொள்ளை நடக்கும் தினத்தில் அம்மனுக்கு பொங்க லிட்டு பூஜைகள் செய்வது மிகவும் நல்லதாக கருதப்படுகிறது.

 

22. ஒவ்வொரு அமாவாசை தினத்தன்றும் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மேல் மலையனூர் வந்து அங்காளம் மனை தரிசித்து செல்கிறார்கள்.

 

23. சமீப காலமாக மேல் மலையனூருக்கு ஆந்திரா, கர் நாடகா மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள்.

 

24. சென்னையில் இருந்து ஒவ்வொரு அமாவா சைக்கும் மேல் மலையனூருக்கு சுமார் 300 சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

 

25. மேல்மலையனூருக்கு வரும் பக்தர்களில் பெரும்பாலானவர்கள் தங்கள் மற்றும் தங்கள்  குடும்பத்தினர் மீதான தோஷங்களை நிவர்த்தி செய்து கொள்ளவே வருகிறார்கள்.

 

26. மேல்மலையனூர் தலத்தில் இரட்டை விநாயகர்கள் உள்ளனர். அவர்களை தரிசித்தால் இரட்டிப்பு பலன்கள் கிடைக்கும் என்பது ஐதீகம்.

 

27. ஆலயத்தின் பின்புறம் அம்மன் பாதம் உள்ளது. நிறைய பக்தர்களுக்கு அதன் விவரம் தெரியாமல் உள்ளது. அங்கு சென்று வழிபட்டால் அம்மனின் கருணை பார்வை உடனடியாக கிடைக்கும் என்கிறார்கள்.

 

28. ஆலயத்தின் முன் பகுதியில் அம்மனின் படுத்துக் கிடக்கும் சிலை உள்ளது-. அந்த அம்மனுக்கு பெரியாயி என்று பெயர். தட்சனின் யாகத்துக்குள் விழுந்து பார்வதிதேவி கலைத் தாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது.அதை பிரதிபலிக்கும் வகையில் இந்த அமைப்பு அமைந்துள்ளது.

 

29. பெரியாயி மல்லாந்து படுத்து இருக்கும் மண்டபத்தை சுற்றி 108 விநாயகர்கள் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

 

30. ஆலயத்தின் ஒரு பகுதியில் காவல் தெய்வமான பாவாடை ராயன் சன்னதி உள்ளது. அங்கு இன்னமும் அசைவ படையல் போட்டு வணங்குகிறார்கள்.

 

31. மேல்மலையனூர் தலத்தில் தினமும் 2 கால பூஜை நடத்தப் படுகிறது. காலை 5.30 மணிக்கும், மாலை 4.30 மணிக்கும் அபிஷேக ஆராதனையுடன் இந்த பூஜை நடைபெறும்.

 

32. வெள்ளி, சனி, ஞாயிறு மற்றும் பவுர்ணமி நாட்களில் அம்மனுக்கு அபிஷேகங்கள் செய்யப்படுவதில்லை.

 

33. மேல்மலையனூர் தலத்தில் மதியம் நடை மூடப்படுவதில்லை. காலை 6 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை பக்தர்கள் வழிபடலாம்.

 

34. அமாவாசை தினத்தன்று இரவிலும் நடை திறந்திருக்கும். விடிய விடிய பக்தர்கள் அங்காள பரமேஸ்வரியை தரிசனம் செய்யலாம்.

 

35. மேல்மலையனூர் தலத்தில் திருஷ்டி கழிக்கும் பழக்கம் ஆதிகாலத்தில் இருந்தது கிடையாது. கடந்த 25 ஆண்டுகளுக்குள்தான் இந்த பழக்கம் உருவாகி இருக்கிறது.

 

36. எலுமிச்சை பழத்தை இத்தலத்தில் நிறைய பக்தர்கள் காலில் மிதித்து அவமரியாதை செய்கிறார்கள். அது புண்ணியத்தை சேர்ப்பதில்லை. பாவத்தைத்தான் தரும்.

 

37. எலுமிச்சை பழத்தை கோவில் வாசலில் வைத்து தலையை சுற்றி போட வேண்டும் என்று எந்தவித ஐதீகமும் கிடையாது. ஆனால் பக்தர்கள் ஒருவரை பார்த்து ஒருவர் செய்கிறார்கள். கோவிலுக்கும் இந்த பழக்கத்துக்கும் எந்த தொடர்பும் கிடையாது.

 

38. அமாவாசை ஊஞ்சல் உற்சவத்தின்போது சிலர் எலுமிச்சை பழத்தை அம்மன் சிலையை நோக்கி வீசு கிறார்கள். இதை தவிர்க்கும்படி பக்தர்களுக்கு ஆலய நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

39. இந்த ஆண்டு ஆடி அமாவாசையை முன்னிட்டு 500-க்கும் மேற்பட்ட சிறப்பு பஸ்கள் மேல்மலையனூருக்கு இயக்கப்பட உள்ளன.

 

40. பக்தர்கள் எளிதாக வழிபடுவதற்காக இத்தலத்தில் 5 வகை வரிசைகளை ஏற்படுத்தி உள்ளனர். அதில் இலவச தரிசன வகை ஒன்று. மற்றப்படி ரூ.10, ரூ.20, ரூ.50, ரூ.100 ஆகிய 4 விதமான கட்டணம் செலுத்தியும் அம்மனை வழிபடலாம்.

 

41. சிவபெருமானுக்கும், சக்தி தேவிக்கும் பித்தம் தெளிந்ததால் அந்த ஐதீக அடிப்படையில் இத்தலத்துக்கு வரும் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக நலம் பெறுகிறார்கள்.

 

42. மேல் மலையனூரில் மலையே கிடையாது. என்றாலும் மலையரசியான பார்வதி இத்தலத்தில் உறைந்ததால் மலையனூர் என்ற பெயர் வந்ததாக சொல்கிறார்கள்.

 

43. அங்காள பரமேஸ்வரி என்ற பெயர் உருவானதற்கு பலவித காரணங்கள் சொல்லப்படுகின்றன. பரமேசுவரனின் அங்கத்தின் இடது பாகத்தை ஆள வரம் கேட்டதால் பரமேஸ்வரிக்கு அங்காளபரமேஸ்வரி என்ற பெயர் ஏற்பட்டதாகவும் ஒரு வரலாறு உண்டு.

 

44. அன்னையின் அருள் பெற்ற வால்மீகி முனிவர் மலையனூரில் மோட்ச பதவி அடைந்தார்.

 

45. ஆதி காலத்தில் மலை யனூர் பகுதி ருத்ர ஆரண்யம் என்றழைக் கப்பட்டது. அது சக்தி பீடமானதும், ருத்ர சக்தி பீடம் என்று மாறியது. அதனால் அங்காளம்மனுக்கு பூங்கா வனத்தாள் என்ற பெயரும் உண்டு.

 

46.அம் + காளம் + அம்மன் = அங்காளம்மன் எனப்படுகிறது. அம் என்றால் உள்ளே, காளம் என்றால் விஷம் என்று அர்த்தமாகும். உள்ளே விஷம் கொண்ட நாகம். நாக வடிவில் அம்மன் புற்றுக்குள் இருப்பதால் இத்தலத்து அம்மன் அங்காளம்மன் என்று அழைக்கப்படுகிறாள்.

 

47. விருதுநகர் மாவட்டம் மாந்தோப்பு என்னும் இடத்திலும் அங்காளம்மன் வீற்றிருந்து பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறாள்.

 

48. இக்கோவிலின் தல விருட்சமாக மயில் கொன்றை என்று அழைக்கப்படும் வாகை மரம் உள்ளது. இந்த மரத்தில் குழந்தை இல்லாதவர்கள் தொட்டில் காட்டினால் குழந்தை பாக்கியம் கிடைக்கிறது.

 

49. திருமணமாகாத ஆண்கள், பெண்கள் தாலிக்கயிறை இந்த மரத்தில் கட்டினால் உடனடியாக அந்த பாக்கியம் கிடைக்கும் என்பது இன்றளவும் ஐதீகமாக உள்ளது.

 

50. அருள்மிகு அங்காள பரமேஸ்வரி திருக்கோவில் முகவரி: மேல்மலையனூர்-604 204, விழுப்புரம் மாவட்டம்.✍🏼🌹

சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை

 சிவ தாண்டவ ஸ்தோத்திரம் உருவான கதை சிவ தாண்டவ ஸ்தோத்திர பாடலுக்கு பின்னால் இருக்கும் வரலாறு… . ராவணன் ஆண்டு வந்த இலங்கைக்கு சிவபெருமானை அழைத...